News April 1, 2024
BREAKING: சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தம்

இன்று முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் ₹5 – ₹20 வரை கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலாகவில்லை. தேர்தல் முடிந்த பிறகு கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் என கூறப்படுகிறது.
Similar News
News January 19, 2026
குடும்ப அட்டைகளுக்கு ₹3,000.. தமிழக அரசு அறிவிப்பு

விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ₹3,000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, வேட்டி, சேலை, முழுக் கரும்பு ஆகிய தொகுப்பு வழங்கப்படவுள்ளன. 97% குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3% பேருக்கும் முறையாக வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
News January 19, 2026
21 நாள்கள் இத சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க!

வாழைப்பழங்களிலேயே செவ்வாழையில் அவ்வளவு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. இதனை 21 நாள்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் உண்டாகுமாம். கண் பார்வை மேம்படும், ஆண்மை குறைவு பிரச்னைகள் சரியாகும், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராகும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். தினமும் காலை உணவோடு செவ்வாழை சாப்பிடுங்கள். அனைவருக்கும் SHARE THIS.
News January 19, 2026
சமூக நலத்திட்டங்களை அடியோடு அழிக்கும் பாஜக: CPI

EPS யாருடனிருந்து தேர்தல் வாக்குறுதியை அறிவிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும் என CPI வீரபாண்டியன் கூறியுள்ளார். இலவசங்களே கூடாது என PM மோடி சொல்வதாக கூறிய அவர், நலத்திட்டங்களை அடியோடு அழிக்கும் பாஜகவுடன் நின்றுகொண்டு, EPS சொல்லும் வாக்குறுதிகளை எப்படி நம்பமுடியும் என கேட்டுள்ளார். மேலும், வாக்குறுதி அளிப்பது இயல்புதான் எனவும் இந்த காரணங்களால் EPS-ன் வாக்குறுதியை ஏற்க இயலாது என்றும் பேசியுள்ளார்.


