News April 1, 2024

BREAKING: சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தம்

image

இன்று முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் ₹5 – ₹20 வரை கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலாகவில்லை. தேர்தல் முடிந்த பிறகு கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் என கூறப்படுகிறது.

Similar News

News January 12, 2026

காலம் காலமாக போராட வேண்டிய அவலம்: OPS

image

தமிழக அரசின் வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு உடனடியாக காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என OPS வலியுறுத்தியுள்ளார். காலமுறை ஊதியத்திற்காக காலம் காலமாக போராட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளதாகவும், அதிக வேலைப்பளு, குறைந்த ஊதியம் என்ற ரீதியில் கிராம உதவியாளர்களின் பணி இருந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கும் செயல் என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

News January 12, 2026

ஈரானில் இந்தியர்கள் கைதா?

image

<<18832349>>ஈரானில்<<>> அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருவதால், அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், அங்கு கலவரத்தில் ஈடுபட்டதாக 6 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானது. இந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது ஃபதலி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் நிலைமை குறித்த உடனடி தகவல்களுக்கு நம்பகமான செய்தி நிறுவனங்களை அணுகவும் அறிவுறுத்தியுள்ளார்.

News January 12, 2026

AI-ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா?

image

மனிதர்களின் கைகளை மீறி போகும் முன் AI-ஐ கட்டுப்படுத்த வேண்டும் என AI நிறுவனங்களை மைக்ரோசாஃப்ட் AI CEO முஸ்தபா சுலைமான் அறிவுறுத்தியுள்ளார். உங்களால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை நீங்கள் வழிநடத்த முடியாது. அதனால் தான் மனிதர்களின் மேற்பார்வையில் ‘Super Intelligence’ நோக்கிய பயணம் அமைய வேண்டும் என்கிறோம். எனவே, மனிதர்களுக்கு தீங்கிழைக்காத வகையில் AI-ஐ மேம்படுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!