News March 18, 2025

குமரியில் திருமணத்தடை நீங்க செல்ல வேண்டிய கோயில்

image

குமரி, கருங்கல்லில் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பகவதி அம்மன் கோவில் உள்ளது. தினமும் காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 10 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இந்த பகவதி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறி கோடி நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், சுயம்வர அர்ச்சனை செய்தால் திருமணத்தடை நீங்கும்.*SHARE TO FRDS

Similar News

News March 19, 2025

குமரி மாவட்டத்தில் கள்ளக் கடல் எச்சரிக்கை!

image

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீடோடி வரையிலான கடலோரப் பகுதிகளில் 12 முதல் 15 வினாடிகளுக்கு ஒருமுறை அலைகள் கரைப்பகுதிக்கு வர வாய்ப்பு உள்ளது. இன்று(மார்ச் 19) மாலை 3.30 மணி வரை இந்த நிலை நீடிக்கும் என்றும் கடல் சார் ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளது. ஆகவே கடற்கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.

News March 19, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(மார்ச் 19) காலை 8.30 மணிக்கு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்ககேட்டு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருவட்டார் சந்திப்பில் தெருமுனை பிரச்சார இயக்கம்.#காலை 9 மணிக்கு முகிலன் கரை அரசு தொடக்கப் பள்ளியில் ஆட்சியர் வழக்கு மீனா தலைமையில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.#இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவில் 4ஆம் நாள் திருவிழா இன்று நடைபெறுகிறது.

News March 19, 2025

ஆங்கிலத்தால்தான் உயர் பொறுப்பில் சுந்தர் பிச்சை: மனோ தங்கராஜ்

image

இந்தி கற்றதாகக் கூறப்படும் சுந்தர் பிச்சை இன்று இந்திக்காரர்களுடன் வேலை பார்க்கவில்லை, மாறாக ஆங்கிலேயர்களுடன் மிக உயர்ந்த பொறுப்பில் பணியாற்றுகிறார். அது இந்தி கற்றதால் அல்ல, ஆங்கிலம் கற்றுக்கொண்டதால். ஒரு வேளை அன்று பள்ளியில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால், இன்று Google Alphabet நிறுவனத்தில் அவர் வகிக்கும் பதவியில் வேறொருவர் அமர்ந்திருப்பார் என்று மனோ தங்கராஜ் எம்எல்ஏ கூறியுள்ளார்.

error: Content is protected !!