News March 18, 2025

தந்தைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தேர்வு எழுத சென்ற மகன்

image

சேலம் மாவட்டம், ஆச்சாங்குட்டப்பட்டியில் உள்ள செங்கரடு பகுதியில் வசித்து வந்த கணேசன் என்பவர் உடல்நலக்குறைவால் இன்று (மார்ச் 18) காலமானார். தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மகன் மணிகண்டன், தனது தந்தையின் கனவை நிறைவேற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுவதற்காக பள்ளிக்குச் சென்றுள்ளார். இந்த நிகழ்வு உறவினர்கள் மட்டுமின்றி அக்கம் பக்கத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Similar News

News July 9, 2025

இனி தப்ப முடியாது: வாக்குமூலம் பதிவு செய்ய கேமரா!

image

சேலம் மாவட்டத்தில், பாலியல் துன்புறுத்தல்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, சேலம் தனியார் நிறுவனம் சார்பில் 2 வீடியோ கேமராக்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.பிருந்தாதேவி முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது தனியார் நிறுவன ஊழியர்கள் உடனிருந்தனர்.

News July 9, 2025

சேலம்: அவசர காலத்தில் உதவும் எண்கள்!

image

சேலம் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News July 9, 2025

சேலம்: பெண்களுக்கு ரூ.50,000 திருமண உதவி!

image

தமிழக அரசு சார்பில், பெற்றோரில்லாத பெண்களுக்காக, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் 1-ல் ரூ.25,000, திட்டம் 2-ல் ரூ.50,000 உதவித்தொகையோடு, தாலி செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, சேலம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றோ அல்லது இ-சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம். SHARE IT <<17008033>>(தொடர்ச்சி 1/2)<<>>

error: Content is protected !!