News March 18, 2025
இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை

மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு ₹1500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால், அவர்களின் பெற்றோர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற்றாலும், அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள், மகளிர் உரிமைத் தொகையும் பெறலாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Similar News
News September 22, 2025
இன்று நவராத்திரி: இவற்றை கண்டிப்பாக பண்ணுங்க!

அம்பிகையை வீட்டிற்கு அழைத்து வரும் நவராத்திரி பண்டிகையில், செய்ய வேண்டிய சில காரியங்கள் உள்ளன *எப்போதும் இறை சிந்தனையிலேயே இருந்து, மனதையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் *தியானம், வழிபாடு ஆகியவற்றில் ஈடுபட வேண்டும் *கொலு வைத்தாலும், வைக்காவிட்டாலும் காலை & மாலையில் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும் *முடிந்தவரை உடை, உணவு, பணம் ஆகியவற்றை கொடுத்து உதவலாம். SHARE IT.
News September 22, 2025
US தடையை இந்தியா வளர்ச்சியாக மாற்றலாம்: ஸ்ரீதர்

H-1B விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளதை இந்தியா சாதமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இதில் சவால்கள் இருந்தாலும் புதிய வாய்ப்புகள் அதிகமாக உருவாகும் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார். நமக்கு தேவையான ஊழியர்கள் உள்நாட்டில் இருக்கும் போது உள்நாட்டு கண்டுபிடிப்புகளை அதிகப்படுத்தி வளர்ச்சியடையலாம் என ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்.
News September 22, 2025
கல்வியை அரசியல் கருவியாக மாற்றும் பாஜக: காங்கிரஸ்

தமிழக அரசு மும்மொழிக் கொள்கையில் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய அமைச்சர் <<17782552>>தர்மேந்திர பிரதான்<<>> தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசு கல்வியை அரசியல் கருவியாக மாற்றி, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அச்சுறுத்துவதாக செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். கல்வி மக்களின் அடிப்படை உரிமை என கூறிய அவர் உடனடியாக TN-ன் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.