News March 18, 2025

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பழைய குற்றாலம்: அமைச்சர்

image

கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி நேற்று சட்டசபையில் பேசியதாவது, குற்றாலத்தில் இரவு பகல் என அனைத்து நேரமும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக இரவு 7 மணி முதல் அனுமதி மறுக்கப்படுகிறது என்றார். பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், குற்றாலம் தற்போது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.

Similar News

News September 14, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

News September 13, 2025

ஆலங்குளம் அருகே தவறான சிகிச்சையால் உயிரிழப்பு

image

அடைக்கலப்பட்டணத்தில் அமைந்துள்ள கிளினிக்கில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவரின் தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்ததாக எழுந்த புகாரின்பேரில் பாவூர்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அனுமதியின்றி அந்த கிளினிக் செயல்பட்டதாக கூறி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா இன்று கிளினிக்கை பூட்டி சீல் வைத்தார்.

News September 13, 2025

தென்காசி: குளத்தில் இருந்து எடுக்கபடும் தண்ணீர்

image

தென்காசி, குத்துக்கல்வலசை ஊராட்சி அடவிநயினார் அணை நீர்ப்பாசனத்திற்குட்பட்ட பொதுபணித்துறைக்கு சொந்தமான நெடுங்குளத்தில் 10க்கும் மேற்பட்ட தண்ணீர் டேங்கர் மூலம் வணிக பயன்பாட்டுக்குக்காக எடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிப்பதாக சொல்லபடுகிறது. நிலத்தடி நீர் சீக்கிரம் வரண்டு விவசாய பயிர்களை காப்பாற்ற முடியாத சூழல் என விவசாயிகளின் வேதனை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!