News March 18, 2025

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பழைய குற்றாலம்: அமைச்சர்

image

கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி நேற்று சட்டசபையில் பேசியதாவது, குற்றாலத்தில் இரவு பகல் என அனைத்து நேரமும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக இரவு 7 மணி முதல் அனுமதி மறுக்கப்படுகிறது என்றார். பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், குற்றாலம் தற்போது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.

Similar News

News July 7, 2025

தென்காசியில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள 18 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஊதியமாக ரூ.11,100 – ரூ.35,100 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர் 21 வயது நிறைவு செய்து அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் விரைவில் https://www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News July 7, 2025

பாவூர்சத்திரத்தில் பெண்கள் உட்பட 150 பேர் கைது

image

பாவூர்சத்திரம் கீழப்பாவூர் விலக்கு, காமராஜர் தினசரி சந்தை ஆகிய இரண்டு இடங்களில் மனமகிழ் மன்றங்களை திறப்பதற்கான பணிகள் நடைபெற்றது. இதனை கண்டித்து நேற்று காமராஜர் சிலை முன்பு நேற்று ஏராளமானோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 77 பெண்கள் உட்பட 150 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

News July 7, 2025

தென்காசி மாவட்டம் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

தென்காசி மாவட்டம் எஸ்.பி அவர்களின் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (ஜூலை 6) தென்காசி உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு நேரம் காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. அல்லது 100ஐ தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!