News March 18, 2025

நகைக் கடன் பெற RBI-யின் புதிய விதிமுறைகள் என்ன?

image

ஏழை எளிய மக்கள், விவசாயிகள் தங்கள் அவசரத் தேவைக்கு நகைக் கடனையே பெரிதும் நம்பியுள்ளனர். இந்நிலையில், நகைக்கடன் வைக்க <<15798931>>RBI<<>> விதித்துள்ள புதிய விதிமுறை, பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. வங்கியில் அடகு வைத்த நகைகளை வட்டியுடன் முழுப்பணமும் செலுத்தி திருப்பி, மறுநாள் தான் மீண்டும் அடகு வைக்க முடியும். இதற்கு முன்பு, அடகு வைத்த நகைகளை ஆண்டு வட்டி மட்டும் கட்டி, அதே தினத்தில் அடகை நீட்டித்துக்கொள்ளலாம்.

Similar News

News March 19, 2025

பழங்களும்… அதன் பயன்களும்…

image

*கொய்யாப்பழம் – பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கும்
*ஆரஞ்சு – பக்கவாதம் வராமல் தடுக்கும்.
*விளாம்பழம் – மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
*கோவைப்பழம் – சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
*சீத்தாப்பழம் – இதயத்தை பலப்படுத்தும்.
*எலுமிச்சம் பழம் – செரிமானத்திற்கு உதவும். பல் சார்ந்த பிரச்னைகளை சரிசெய்யும்.
*பலாப்பழம் – நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்.

News March 19, 2025

ரகுவரனின் நீங்கா நினைவுகள்…

image

“I KNOW” என்ற வார்த்தையை கேட்டாலே சட்டென நமக்கு நினைவுக்கு வருபவர் நடிகர் ரகுவரன். தமிழ் சினிமாவில், வில்லன் கதாபாத்திரத்தில் பக்காவாக பொருந்தினாலும், குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியது ஏராளம். முதல்வன் படத்தில் CM, பாட்ஷா படத்தில் கேங்ஸ்டர் என என்றும் நம் நினைவில் நீங்காமல் இருக்கும் அவருக்கு, இன்று 17வது ஆண்டு நினைவு நாள். ரகுவரன் என்றால் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?

News March 19, 2025

மார்ச் 19: வரலாற்றில் இன்று!

image

*1915 – புளூட்டோவின் புகைப்படம் முதல்முறையாக எடுக்கப்பட்டது.
*1944 – 2ஆம் உலகப் போர்: நாசி ஜெர்மனிப் படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றின.
*1962 – அல்ஜீரியா விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1972 – இந்தியாவும் வங்கதேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
*1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். ஏப்ரல் 19இல் இறந்தார்.

error: Content is protected !!