News March 18, 2025
நகைக் கடன் பெற RBI-யின் புதிய விதிமுறைகள் என்ன?

ஏழை எளிய மக்கள், விவசாயிகள் தங்கள் அவசரத் தேவைக்கு நகைக் கடனையே பெரிதும் நம்பியுள்ளனர். இந்நிலையில், நகைக்கடன் வைக்க <<15798931>>RBI<<>> விதித்துள்ள புதிய விதிமுறை, பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. வங்கியில் அடகு வைத்த நகைகளை வட்டியுடன் முழுப்பணமும் செலுத்தி திருப்பி, மறுநாள் தான் மீண்டும் அடகு வைக்க முடியும். இதற்கு முன்பு, அடகு வைத்த நகைகளை ஆண்டு வட்டி மட்டும் கட்டி, அதே தினத்தில் அடகை நீட்டித்துக்கொள்ளலாம்.
Similar News
News September 22, 2025
நடிகை ராதிகா வீட்டில் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகைகள் ராதிகா, நிரோஷாவின் தாயாருமான கீதா ராதா (86) நேற்று காலமானார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு சினிமா பிரபலங்கள், முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலிக்கு பிறகு 4 மணியளவில் இறுதி ஊர்வலம் தொடங்கும் என்றும் மாலை 5.30 மணிக்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 22, 2025
ஆசிய கோப்பையில் மீண்டும் IND vs PAK?

ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 3-வது முறையாக மோத மீண்டும் வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால், இந்திய அணி இறுதி போட்டியை எட்டி விடும். அதே போல, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டாலும், இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. இதனால், மீண்டும் ஒருமுறை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் வாய்ப்பு ஏற்படும்.
News September 22, 2025
கல்வித் தரத்தை அவமதிக்கும் ஆர்.என்.ரவி: வேல்முருகன்

தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை இழிவுபடுத்தும் வகையில், கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து கூறுவதாக தவாக தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் என்றாலே கல்வி, அறிவு, திறமை என்பது நாடு முழுவதும் பெருமையாகப் பேசப்படும் ஒன்று. அந்தக் கல்வித் தரத்தை குறைத்து மதிப்பிட்டு, “TN-ல் தரமான கல்வி இல்லை” என கவர்னர் பேசியிருக்கிறார். இதை உடனே அவர் திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.