News March 18, 2025

நாக்பூரில் வெடித்த கலவரம்: காரணம் என்ன?

image

நாக்பூரில் கலவரம் மூண்டதற்கு ‘சாவா’ திரைப்படமே காரணமாகி இருக்கிறது. சட்டப்பேரவையில் படத்தை குறிப்பிட்டு, அவுரங்கசீப்பை புகழ்ந்து சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி கோஷமிட்டதால், விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது புனித நூலை அவர்கள் எரித்ததாக வதந்தி பரவியதால், வன்முறை மூண்டு கலவரமாக வெடித்தது.

Similar News

News March 19, 2025

பழங்களும்… அதன் பயன்களும்…

image

*கொய்யாப்பழம் – பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கும்
*ஆரஞ்சு – பக்கவாதம் வராமல் தடுக்கும்.
*விளாம்பழம் – மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
*கோவைப்பழம் – சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
*சீத்தாப்பழம் – இதயத்தை பலப்படுத்தும்.
*எலுமிச்சம் பழம் – செரிமானத்திற்கு உதவும். பல் சார்ந்த பிரச்னைகளை சரிசெய்யும்.
*பலாப்பழம் – நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்.

News March 19, 2025

ரகுவரனின் நீங்கா நினைவுகள்…

image

“I KNOW” என்ற வார்த்தையை கேட்டாலே சட்டென நமக்கு நினைவுக்கு வருபவர் நடிகர் ரகுவரன். தமிழ் சினிமாவில், வில்லன் கதாபாத்திரத்தில் பக்காவாக பொருந்தினாலும், குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியது ஏராளம். முதல்வன் படத்தில் CM, பாட்ஷா படத்தில் கேங்ஸ்டர் என என்றும் நம் நினைவில் நீங்காமல் இருக்கும் அவருக்கு, இன்று 17வது ஆண்டு நினைவு நாள். ரகுவரன் என்றால் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?

News March 19, 2025

மார்ச் 19: வரலாற்றில் இன்று!

image

*1915 – புளூட்டோவின் புகைப்படம் முதல்முறையாக எடுக்கப்பட்டது.
*1944 – 2ஆம் உலகப் போர்: நாசி ஜெர்மனிப் படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றின.
*1962 – அல்ஜீரியா விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1972 – இந்தியாவும் வங்கதேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
*1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். ஏப்ரல் 19இல் இறந்தார்.

error: Content is protected !!