News March 18, 2025

சிவகாசி இளைஞர் குமரியில் எரித்து கொலை

image

கன்னியாகுமரி அருகே லீபுரம் பாட்டுக்குளத்தில் 2 நாட்களுக்கு முன் எரிந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில் சிவகாசி விளாம்பட்டியை சேர்ந்த ஹரிஹரசுதன் என்பதும், அவர் தூத்துக்குடியில் கொத்தனார் வேலை செய்த போது பழக்கமான லீபுரம் ராபர்ட்சிங்குடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ஹரிஹரசுதன் அடித்து கொலை செய்து எரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

Similar News

News August 15, 2025

ஊஞ்சல் சேவையில் ஆண்டாள், ரெங்கமன்னார்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடி மாத கடைசி
வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவையில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

News August 15, 2025

விருதுநகர்: கால அவகாசம் நீட்டிப்பு

image

பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிக்கு முன்பதிவு செய்ய கால அவகாசம் ஆக.20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் https://cmtrophy.sdat.in/https://sdat.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 15, 2025

விருதுநகர்: அரசின் 3 மாத இலவச AI பயிற்சி..!

image

தமிநாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு(AI) துறையில் வேலைகளை பெறும் வகையில், 12 வாரங்கள் AI பயிற்சி மற்றும் சான்றிதழ் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடிவுத்தவர்கள் கலந்துகொள்ளலாம். வயது: 18 முதல் 35 வரை இருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்கள். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!