News March 18, 2025
சமாதானம் அடைந்த செங்கோட்டையன்?

மூத்த தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், செங்கோட்டையன் சமாதானம் அடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. EPS மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்தார். இந்நிலையில், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் செங்கோட்டையனிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், சுமுகத் தீர்வு எட்டப்பட்டதாகவும், இனி கருத்துவேறுபாடு இருக்காது எனவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
Similar News
News March 18, 2025
ரயில் விபத்துக்கள் 80% குறைந்துள்ளன: வைஷ்ணவ்

2014-15 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது நிகழ்ந்த ரயில் விபத்துக்கள் 80% குறைந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். லாலு, மம்தா அமைச்சர்களாக இருந்த போது ரயில் விபத்துக்களின் எண்ணிக்கையை விட தற்போது விபத்துகள் குறைந்துள்ளதாகவும், இது மேலும் கட்டுப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். ரயில் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு அதிக அக்கறை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 18, 2025
மீனவர் கைது: மத்திய அரசுக்கு ஸ்டாலின் மீண்டும் கடிதம்

TN மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு CM ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில், 3 ராமேஸ்வரம் மீனவர்கள் கைதாகி இருப்பதை சுட்டிக்காட்டி, கடந்த 3 மாதங்களில் இது 10வது சம்பவம் என கூறியுள்ளார். மேலும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள 110 தமிழக மீனவர்கள், படகுகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News March 18, 2025
மலரும் நினைவுகள்… ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஞாபகம் இருக்கா?

மறக்க முடியாத குழந்தை பருவ நினைவுகளில், தெருக்களில் கிரிக்கெட் விளையாடியதும் ஒன்று. பக்கத்து வீட்டிற்குள் பந்து போனால் அவுட், ஒன் பிட்ச் கேட்ச் அவுட் என நாம் வைப்பதே ரூல்ஸ். தெரு கிரிக்கெட் தொடர்பான ஆய்வில், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்வது வருத்தமான முடிவு என தெரியவந்துள்ளது. 2வது இன்னிங்க்ஸ் பெரும்பாலும் ரத்தாவதால் அவர்கள் பேட்டிங் செய்ய முடியாத சூழல் உள்ளதாம். Share your Experience