News March 18, 2025
சமாதானம் அடைந்த செங்கோட்டையன்?

மூத்த தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், செங்கோட்டையன் சமாதானம் அடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. EPS மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்தார். இந்நிலையில், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் செங்கோட்டையனிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், சுமுகத் தீர்வு எட்டப்பட்டதாகவும், இனி கருத்துவேறுபாடு இருக்காது எனவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
Similar News
News March 19, 2025
JOB ALERTS: இந்தோ திபெத் படையில் வேலைவாய்ப்பு

இந்தோ-திபெத்திய பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 133 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன. இதற்கு கல்வித் தகுதி 10ஆம் வகுப்புத் தேர்ச்சி. வயது வரம்பு 18-23 வரை. வேலையில் சேர விரும்புவோர் இந்தோ-திபெத்திய பாதுகாப்புப் படை இணையதளமான <
News March 19, 2025
இஸ்ரேல் தாக்குதலில் 400 பேர் பலி: ஹமாஸ்

இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 400 பேர் பலியாகி இருப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. 59 பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் நிபந்தனை விதித்ததால், 2 மாத சண்டை நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் ஹமாஸ் தலைவர் உள்ளிட்ட 400 பேர் உயிரிழந்து இருப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இதனிடையே, தாக்குதலை தீவிரபடுத்த போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
News March 19, 2025
ராசி பலன்கள் (19.03.2025)

➤மேஷம் – நன்மை ➤ரிஷபம் – மேன்மை ➤மிதுனம் – நேர்மை ➤கடகம் – லாபம் ➤சிம்மம் -களிப்பு ➤கன்னி – சுகம் ➤துலாம் – பயம் ➤விருச்சிகம் – போட்டி ➤தனுசு – பாராட்டு ➤மகரம் – பரிவு ➤கும்பம் – தெளிவு ➤மீனம் – அன்பு.