News March 18, 2025
KYC அப்டேட்.. வங்கிகளுக்கு பறந்த உத்தரவு

வங்கிகளில் வாடிக்கையாளர்களின் அடிப்படை விவரங்களைப் பதிவுசெய்யும் கேஒய்சி (KYC) நடைமுறையால், வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்படுவதும், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில், தொடர் புகார் எதிரொலியாக KYC படிவங்களை கேட்டு வாடிக்கையாளர்களை வங்கிகள் தொந்தரவு செய்யக்கூடாது என்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News March 19, 2025
அறிவிக்காமல் விவாதிக்க முடியுமா? வானதி

மத்திய அரசு அறிவிப்பு வெளியிடாத நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து நாடாளுமன்றத்தில் எப்படி விவாதிக்க முடியும் என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் திமுகவினர் தங்களது கற்பனை மூலம் உருவாக்கிய சிந்தனையை விவாதிக்க முடியுமா என வினவிய அவர், தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்கக் கோரி திமுக MPக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
News March 19, 2025
பழங்களும்… அதன் பயன்களும்…

*கொய்யாப்பழம் – பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கும்
*ஆரஞ்சு – பக்கவாதம் வராமல் தடுக்கும்.
*விளாம்பழம் – மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
*கோவைப்பழம் – சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
*சீத்தாப்பழம் – இதயத்தை பலப்படுத்தும்.
*எலுமிச்சம் பழம் – செரிமானத்திற்கு உதவும். பல் சார்ந்த பிரச்னைகளை சரிசெய்யும்.
*பலாப்பழம் – நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்.
News March 19, 2025
ரகுவரனின் நீங்கா நினைவுகள்…

“I KNOW” என்ற வார்த்தையை கேட்டாலே சட்டென நமக்கு நினைவுக்கு வருபவர் நடிகர் ரகுவரன். தமிழ் சினிமாவில், வில்லன் கதாபாத்திரத்தில் பக்காவாக பொருந்தினாலும், குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியது ஏராளம். முதல்வன் படத்தில் CM, பாட்ஷா படத்தில் கேங்ஸ்டர் என என்றும் நம் நினைவில் நீங்காமல் இருக்கும் அவருக்கு, இன்று 17வது ஆண்டு நினைவு நாள். ரகுவரன் என்றால் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?