News March 18, 2025
தமிழ்நாட்டை முந்தும் தெலங்கானா

தெலங்கானாவில் BC பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 42%ஆக உயர்த்தி மசோதா நிறைவேற்றியிருக்கிறது அம்மாநில அரசு. இந்தியாவில் தமிழ்நாடு(69%) தவிர, எந்த மாநிலத்திலும் 50%க்கு மேல் இட ஒதுக்கீடு கிடையாது. அதனை முறியடிக்கும் வகையில், மொத்த இட ஒதுக்கீட்டை 70 சதவீதமாக உயர்த்தியிருக்கிறார் ரேவந்த் ரெட்டி. அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை சுட்டிக்காட்டி அவர் இதனை செய்திருக்கிறார்.
Similar News
News September 22, 2025
அப்பாவுக்கே துரோகம் செய்த அன்புமணி: எம்.ஆர்.கே.

பதவிக்காக முகவரியை மாற்றி கட்சியை கைப்பற்றிய அன்புமணிக்கு திமுகவை பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சாடினார். கொரோனா லாக்டவுனில் திமுகவினர் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அதன்பிறகு ஸ்டாலின் CM ஆக வேண்டும் என மக்கள் முடிவெடுத்தார்கள். ஆனால், அப்பாவுக்கு துரோகம் செய்த அன்புமணி, மக்களுக்காக என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார்.
News September 22, 2025
75 ஆண்டுகளில் அழியப்போகும் 7 இந்திய நகரங்கள்

Intergovernmental Panel on Climate Change (IPCC) அறிக்கைகளின் படி, பூமி தற்போது காலநிலை மாற்றத்தால் மிகப்பெரிய ஆபத்துகளை சந்தித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, 2100-ம் ஆண்டுக்குள் பல இந்திய நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாம். இதில் தமிழகத்தை சேர்ந்த 2 நகரங்களும் உள்ளன. அவற்றை அறிய மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். பிறருக்கும் SHARE பண்ணுங்க.
News September 22, 2025
H-1B விசா விதிகளை கண்காணிக்க புதிய திட்டம்

H-1B விசா விதிகளை கண்காணிக்க USA-ன் தொழிலாளர் நலத்துறையால் ‘ப்ராஜக்ட் ஃபயர்வால்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ➤தகுதியான USA பணியாளர்களுக்கு பணி வழங்க மறுப்பது ➤சந்தை மதிப்பில் ஊதியம் வழங்காமல் குறைவான ஊதியத்துக்கு வெளிநாட்டு பணியாளர்களை பணிக்கு அமர்த்துவது ➤USA பணியாளர்களை நீக்கிவிட்டு, H-1B பணியாளர்களை அமர்த்துவது உள்ளிட்டவைகளை தடுப்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.