News March 18, 2025

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு: சிபிஐ விசாரிக்க தடை

image

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பதவிக் காலத்தில் ஆவின் நிறுவனத்தில் ₹3 கோடி வரை முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் 400 பக்க ஆவணங்களை, மொழிபெயர்த்து தருமாறு ஆளுநர் கேட்பதாக உச்ச நீதிமன்றத்தில் TN அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் கேட்ட ஆவணங்களை 2 வாரத்திற்குள் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Similar News

News July 6, 2025

ரஜினி & அஜித்துடன் நடிக்க ஆசை: ஷிவம் துபே

image

தனக்கு ரஜினிகாந்த் & அஜித்குமார் ஆகியோரை மிகவும் பிடிக்கும் என ஷிவம் துபே கூறியுள்ளார். சுரேஷ் ரெய்னா கோலிவுட்டில் அறிமுகமாகவுள்ள பட விழாவில் பேசிய அவர், மேற்கூறிய நடிகர்களுடன் நடிக்க ஆசை என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார். இது இரு நடிகர்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளது. முன்பு, சூர்யாவை ஃபேவரைட் ஹீரோவாக தல தோனி & சின்ன தல இருவரும் கூறியிருந்தனர்.

News July 6, 2025

பட்டாசு ஆலை விபத்து.. CM ஸ்டாலின் நிவாரணம்

image

விருதுநகர் வெற்றிலையூரணி கிராமத்தில் <<16962592>>பட்டாசு ஆலை வெடி விபத்தில்<<>> பால குருசாமி என்பவர் உயிரிழந்ததை அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ₹4 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ₹1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News July 6, 2025

போலீசையும் தண்டிக்கும் BNS 296 சட்டம் தெரியுமா?

image

நண்பர்களுடன் சாலையில் நின்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது அங்கு வரும் ஒரு போலீஸ்காரர் மரியாதை குறைவாக, ‘வாடா… போடா’ என பேசினால், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும். பாரதீய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 296 ஆபாசமாக பேசுதலுக்கு தண்டனையை வழங்குகிறது. குற்றம் என நிரூபிக்கப்பட்டால், 3 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது 1000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

error: Content is protected !!