News March 18, 2025
வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர தடை!

நாக்பூரில் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்கள் தவிர, வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறை பாதித்த பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டுள்ளன. முகமூடி அணிந்து வந்தவர்கள்தான் கலவரத்தில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
Similar News
News September 22, 2025
மா வந்தே: PM மோடி படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

PM மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ‘மா வந்தே’ என்ற படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடித்து வருகிறார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சிறுவயது முதல் தேசத்தின் தலைவராக உயர்ந்த வரலாற்றையும், உண்மை சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
News September 22, 2025
ஆபரேஷன் சிந்தூர் 2.. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

மொரோக்கோ சென்றுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்தார். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஆபரேஷன் சிந்தூர் பாகம் 2, 3 எல்லாம் பாகிஸ்தானின் நடவடிக்கையை பொறுத்தே அமையும் எனத் தெரிவித்தார். மேலும், அவர்களது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தார்.
News September 22, 2025
BREAKING: ஆவின் பொருள்கள் விலை குறைந்தது

ஜிஎஸ்டி குறைப்பு அமலுக்கு வந்ததை அடுத்து ஆவின் பொருள்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. நெய், பனீர் ஆகியவற்றின் விலையை குறைத்து ஆவின் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ நெய் ₹40 குறைந்து ₹650-க்கு விற்கப்படும். ₹300-க்கு விற்கப்பட்ட அரை கிலோ பனீர் இனி ₹275-க்கு விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 கிராம் பனீர் விலையும் ₹110 ஆக குறைக்கப்பட்டுள்ளது.