News March 18, 2025
மார்ச் 18: வரலாற்றில் இன்று!

*1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி, 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். 2 ஆண்டுகளில் விடுதலையானார்.
*1858 – டீசல் எஞ்ஜினை கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல் பிறந்த தினம்.
*இந்திய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம்.
*உலக மறுசுழற்சி தினம்.
*ஆசிரியர் நாள் (சிரியா)
*ஆண்கள் மற்றும் போர் வீரர்கள் நாள் (மங்கோலியா)
Similar News
News March 18, 2025
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ஷிண்டே

முகலாய மன்னன் அவுரங்கசீப்பை புகழ்பவர்கள் துரோகிகள் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசியிருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்துள்ளது. அவுரங்கபாத்தில் உள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அவர் இவ்வாறு பேசியிருக்கிறார். இந்த பிரச்னையை மையமாகக் கொண்டு நேற்று நாக்பூரில் கலவரம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
News March 18, 2025
59% தமிழக எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்கு

தமிழகத்தில் 59% MLAக்கள் மீது கிரிமினல் வழக்கு இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ஆந்திராவில் 79%, தெலங்கானா, கேரளாவில் 69%, பிஹாரில் 66%, மகாராஷ்டிராவில் 65% எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், 98 திமுக எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்கு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News March 18, 2025
4,092 எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள்

நாடு முழுவதும் 4,092 எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு, 28 மாநிலங்களில் உள்ள 4,123 எம்எல்ஏக்களின் பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்தது. அதில், 1,205 எம்எல்ஏக்கள் மீது கொலை, கடத்தல் வழக்கு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திராவில் (79%) 138 எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.