News March 17, 2025
காயங்களை நாய் நக்கினாலும் ரேபிஸ் தடுப்பூசி அவசியம்

மனிதர்களின் காயங்களை நாய் நக்கினாலும் ஏஆர்வி ரேபிஸ் தடுப்பூசி போட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாய் கடித்து தடுப்பூசி போடாத நபர், ராணிப்பேட்டையில் ஹாஸ்பிடலில் உயிரிழந்தார். இதையடுத்து சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பில், காயங்களில் நாய் நக்கினாலும், நாயின் உமிழ்நீர் மனிதர்கள் மீது பட்டாலும் விஷம்தான். இதற்கும் ஏஆர்வி தடுப்பூசி போட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Similar News
News March 18, 2025
செயற்கை இதயத்துடன் உயிர் வாழும் மனிதர்!

ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக செயற்கை இதயத்துடன் 100 நாள் வாழ்ந்து ஒருவர் சாதனை படைத்துள்ளார். நியூ சவூத்வேல்ஸை சேர்ந்த அந்த நபருக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட, சிட்னியில் உள்ள ஹாஸ்பிடலில் டைட்டானியத்தில் உருவாக்கப்பட்ட BiVACOR என்ற செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. அதனுடன் 100 நாள் வரை அவர் கடந்திருக்கிறார். உலகிலேயே 6 பேருக்கு மட்டுமே இதுவரை செயற்கை இதயம் பொருத்தப்பட்டிருக்கிறது.
News March 18, 2025
டிரம்பின் சோஷியல் மீடியாவில் இணைந்த மோடி!

அமெரிக்க அதிபர் டிரம்பின் மீடியா மற்றும் டெக்னாலஜி குழுமத்துக்கு சொந்தமான ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் பிரதமர் மோடி இணைந்துள்ளார். இதில் கடந்த 16 ஆம் தேதி அமெரிக்க தொகுப்பாளர் லெக்ஸ் பிரிட்மேனுடன் பிரதமர் மோடி கலந்துரையாடிய வீடியோவை டிரம்ப் பகிர்ந்துள்ளார். இந்த சமூக ஊடக தளத்தில் இணைந்துள்ள பிரதமர் மோடி, தனது கலந்துரையாடல் வீடியோவை பகிர்ந்த டிரம்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
News March 18, 2025
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு?

தமிழகத்தில் 58,000 அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 1.2 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தப் பள்ளிகளில் மார்ச் 1ம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கையில், 17ம் தேதி வரையில் 1.28 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது. எனினும், கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில், 1.50 லட்சம் மாணவர்கள் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.