News March 17, 2025
விழுப்புரத்தில் பணி நியமன ஆணை வழங்கல்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி -IV தேர்வில் தேர்ச்சி பெற்று விழுப்புரம் மாவட்ட வருவாய் அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.03.2025) வழங்கினார்.
Similar News
News September 13, 2025
விழுப்புரம்: SBI வங்கியில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
News September 13, 2025
முதலமைச்சர் கோப்பை: மாணவ, மாணவிகளுக்குப் பதக்கங்கள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், மாவட்ட அளவிலான ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, இன்று (செப்.13) மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நல அலுவலர் உடனிருந்தார்.
News September 13, 2025
விழுப்புரம்: தலையெழுத்து மாற வேண்டுமா? இங்கு போங்க

விழுப்புரம் அருகே கோலியனூர் வாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சாகாவரம் பெற்றிருந்த மகிஷாசுரன் தேவர்களையும், மக்களையும் துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்கச் சிவன் உத்தரவிட்டார். அவனை அழித்தவர்களுக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க இத்தலத்திலுள்ள சிவபெருமாளை வணங்கி நிவர்த்தி அடைந்தனர். இந்த கோயிலில் வழிபட்டால் தலையெழுத்து மாறுமென்பது நம்பிக்கை. மாற்றத்தை எதிர்பார்க்கும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!