News March 17, 2025
போடி: பரமசிவன் கோவில் சிறப்புகள் பற்றி தெரியுமா?

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் அமைந்துள்ளது பரமசிவன் கோவில். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் தலவிருட்சம் தரும் வேம்பு மரம் உள்ளது. சிவராத்திரி, திருக்கிருத்திகை, உள்ளிட்ட நாட்களில் இங்குள்ள வேம்பு மரத்தை வழிபட்ட பிறகு , இங்கு நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு மூலவரையும் ,உற்சவரையும் வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் செய்து உதவுங்கள் .
Similar News
News March 18, 2025
2024.ல் 1330 விபத்துகளில் 408 பேர் உயிரிழப்பு

தேனி மாவட்டத்தில் 5 போலீஸ் சப் டிவிஷன்கள் உள்ளன. இந்த சப் டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2023-இல் 1174 விபத்துகளில் 330 பேர் உயிரிழந்துள்ளனர் அதே சமயம் 2024.ம் ஆண்டு 56 விபத்துக்கள் அதிகரித்து மொத்தம் 1230 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில் மொத்தம் 408 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் காலங்களில் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
News March 18, 2025
தாமதமாக வந்த அதிகாரிகளை தவிக்க விட்ட தேனி கலெக்டர்

மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு முன் நடக்கும் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் தேனி கலெக்டர் ரஞ்சித்சிங் தலைமையில் நேற்று மார்ச் 17 காலை 9:00 மணிக்குத் துவங்கியது. காலை 9:15 மணிக்கு மேல் வந்த 12 அதிகாரிகளை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அவர் அனுமதிக்கவில்லை. கூட்ட அரங்கிற்கு வெளியே அவர்கள் காத்திருந்தனர். மீண்டும் 10:30 மணிக்கு மக்கள் குறைதீர் கூட்டம் துவங்கியதும் அதிகாரிகள் உள்ளே சென்றனர்.
News March 18, 2025
போடி-மதுரைக்கு காலை ரயில் இயக்க பரிசீலனை

மதுரை-போடி இடையே உள்ள 96 கி.மீ., தூர அகல ரயில் பாதை தற்போது ரூ.98.33 கோடி செலவில் மின் மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கரிசல் கிஷோர் மதுரை – போடி இடையே ரயில்வே ட்ராக்கை ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் போடியிலிருந்து மதுரைக்குக் காலையில் ரயில் இயக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இத்திட்டம் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.