News March 17, 2025

சென்னை டூ நாகை: இது பக்கம் போயிறாதீங்க மக்களே

image

சென்னையில் இருந்து நாகை வரையிலான கடற்பகுதிகள் இன்று கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் கடற்பகுதிகளில் 8 முதல் 12 அடி வரை அலைகள் மேலெழும்பும் என்பதால், பொதுமக்கள் கடல் அருகே செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஏதாவது ஒரு கடற்பகுதி கொந்தளிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், கிட்டத்தட்ட மாநிலத்தின் பாதி கடற்கரை பகுதிகளில் இந்நிலை என்பது விசித்திரமாக உள்ளது.

Similar News

News September 23, 2025

AI-ஆல் பெண்களுக்கு தான் அதிக பாதிப்பா!

image

AI-ஆல் ஆண்களை விட பெண்கள் வேலையிழக்கும் அபாயம் அதிகம் என ஐநா தெரிவித்துள்ளது. தொழில்நுட்பத்துறையில் பெண்களின் 28% வேலைகளும், ஆண்களின் 21% வேலைகளும் AI-ஆல் செய்யமுடியும். இதற்கு, இத்துறையில் பெண்கள் குறைவாக இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், 2030-க்குள் 34.3 கோடி பெண்கள் பாதிக்கப்படலாம். எனவே, இந்த பாலின பாகுபாடை உடனடியாக சரி செய்ய ஐநா வலியுறுத்தியுள்ளது.

News September 23, 2025

RECIPE: குதிரைவாலி- கருப்பட்டி ஆப்பம்!

image

குதிரைவாலி அரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும் *இளநீரை புளிக்க வைத்து மாவில் சேர்த்து, 6 மணி நேரம் புளிக்க வைக்கவும் *கருப்பட்டியை கரைத்து அடுப்பில் வைத்து கொதித்ததும், வடிகட்டி மாவில் சேர்க்கவும் *இந்த மாவை ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் பஞ்சு போன்றும் சுட்டு எடுத்தால், சுட சுட குதிரைவாலி- கருப்பட்டி ஆப்பம் ரெடி. SHARE.

News September 23, 2025

I Don’t care: சர்ச்சைக்கு பதிலளித்த பாக். வீரர்

image

ஆசிய கோப்பையில் இந்தியா உடனான Super 4 ஆட்டத்தில், பாக்., வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அரைசதம் விளாசியிருந்தார். அதனை கொண்டாடும் விதமாக பேட்டை வைத்து துப்பாக்கி சுடுவதுபோல செய்கை காட்டினார். இக்காட்சிகள் இந்திய ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், அரைசதம் அடித்ததால் அப்படி கொண்டாடியதாகவும், பிறர் என்ன நினைப்பார்கள் என்பதில் தனக்கு கவலையில்லை எனவும் ஃபர்ஹான் கூறியுள்ளார்.

error: Content is protected !!