News March 17, 2025
மீண்டும் மன்னராட்சியா..? – ஈபிஎஸ் காட்டம்

திமுக ஆட்சி ஏழை மக்களை ஏமாற்றுகிறது எனவும் இந்த ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது எனவும் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சி ஏற்பட துணை நிற்கக்கூடாது என்றும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News March 18, 2025
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 41 வாகனங்கள் நாளை ஏலம்

சேலம், பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக கடத்த பயன்படுத்திய 41 வாகனங்களை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. இதனை அடுத்து 41 வாகனங்களை நாளை காலை 10 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. சேலம் சர்க்கார் கொல்லப்பட்டிஉணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஏலம் நடைபெறும்.
News March 18, 2025
சேலத்தில் அமையயுள்ள DOME THEATER

சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் பகுதியில் 95 இருக்கைகளுடன் கூடிய, டோம் தியேட்டர் (DOME THEATER) கட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, பார்வையாளரைச் சுற்றி, 360 டிகிரியிலும் காட்சி ஓடும் வகையில் இந்த தியேட்டர் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த திரையரங்கிற்காக திரைப்பட ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
News March 18, 2025
சேலத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

சேலம், அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுமதி ( 43), தனது மகள் அட்சயா, மகன் கவியரசன் ஆகியோருடன், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில் தங்களுக்கு சொந்தமான நிலம் காடையாம்பட்டி இருப்பதாகவும், இதனை விற்கவிடாமல் தனது உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.