News March 17, 2025

சேலத்தில் 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவன்

image

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் அருள். இவரது 2 வயது மகன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து எடப்பாடி அரசு மருத்துவமனையில் சோதனை செய்தபோது, 5 ரூபாய் நாணயத்தை சிறுவன் விழுங்கியது தெரியவந்தது. இந்நிலையில், மருத்துவர்கள் தினேஷ்குமார் மற்றும் செந்தில்குமார் கொண்ட குழுவினர், அறுவை சிகிச்சை செய்து நாணயத்தை அகற்றினர். பெற்றோர்களே உஷார். இதை மற்றவர்களுக்கும் பகிரவும்.

Similar News

News September 13, 2025

சேலம்: 148 பணியிடங்களுக்கு 4000 பேர் விண்ணப்பம்!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 148 உதவியாளர் பணியிடங்களுக்கு 4,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். 4 தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எழுத்துத் தேர்வு வரும் அக்.11- ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 13, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.13) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News September 13, 2025

சேலம்: சிசிடிவி கேமராக்கள் மூன்றாவது கண்!

image

சேலம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், கண்டறியவும் சிசிடிவி கேமராக்கள் அனைவருக்கும் உதவியாக உள்ளது. தெருக்கள், கடைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், குற்றத்தடுப்பிலும், குற்றங்களை கண்டறிவதிலும் உற்ற நண்பனாய் விளங்கும் சிசிடிவி கேமிராக்களை நிறுவி பாதுகாப்பை மேம்படுத்துவோம்.

error: Content is protected !!