News March 17, 2025
சேலத்தில் 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவன்

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் அருள். இவரது 2 வயது மகன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து எடப்பாடி அரசு மருத்துவமனையில் சோதனை செய்தபோது, 5 ரூபாய் நாணயத்தை சிறுவன் விழுங்கியது தெரியவந்தது. இந்நிலையில், மருத்துவர்கள் தினேஷ்குமார் மற்றும் செந்தில்குமார் கொண்ட குழுவினர், அறுவை சிகிச்சை செய்து நாணயத்தை அகற்றினர். பெற்றோர்களே உஷார். இதை மற்றவர்களுக்கும் பகிரவும்.
Similar News
News July 9, 2025
விண்ணப்பித்த உடன் குடிநீர் இணைப்பு!

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கு பல மாதங்கள் ஆகி வந்த நிலையில், நடைமுறையை எளிதாக்கும் முயற்சியாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, இனி விண்ணப்பித்தவுடன் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகையை 10 தவணைகளாக செலுத்தலாம் எனவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
இனி தப்ப முடியாது: வாக்குமூலம் பதிவு செய்ய கேமரா!

சேலம் மாவட்டத்தில், பாலியல் துன்புறுத்தல்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, சேலம் தனியார் நிறுவனம் சார்பில் 2 வீடியோ கேமராக்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.பிருந்தாதேவி முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது தனியார் நிறுவன ஊழியர்கள் உடனிருந்தனர்.
News July 9, 2025
சேலம்: அவசர காலத்தில் உதவும் எண்கள்!

சேலம் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!