News March 17, 2025
90 வயது மூதாட்டி கொலை: விசாரணையில் அதிர்ச்சி

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே நேற்று முன்தினம் சரஸ்வதி என்ற 90 வயது மூதாட்டியை கொடூரமாக கொன்ற, அதே பகுதியை சேர்ந்த தாமோதரன், கோகுல்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், குடி மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இருவரும், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் தங்கத் தோடினை பறிக்க முயன்று, வலியால் கத்திய அவரை முகம், மார்பில் கண்மூடித்தனமாக தாக்கி கொன்றது தெரியவந்தது.
Similar News
News September 7, 2025
நாமக்கல் : 4 சக்கர வாகன ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விவரம்

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 6) இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாமக்கல்: ராஜா மோகன்(94422 56423) ராசிபுரம்: கோவிந்தசாமி (94981 69110), ரவி (94981 68665) திருச்செங்கோடு: டேவிட் பாலு (94865 40373), செல்வராசு (99944 97140), வேலூர்: ரவி (94981 68482) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.
News September 6, 2025
நாமக்கல்லில் இருந்து நாளை பெங்களூரு சிறப்பு ரயில் !

நாமக்கல் வழியாக வண்டி எண் 06103/06104 திருநெல்வேலி – ஷிமோகா ரயில் நாளை ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:55 மணிக்கு நாமக்கலில் இருந்து பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி, ஷிமோகா போன்ற பகுதிகளுக்கு இயங்க உள்ளதால் நாமக்கல் மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
News September 6, 2025
நாமக்கல்: NO EXAM அரசு வேலை.. ரூ.70,000 சம்பளம்!

நாமக்கல் மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். இதற்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <