News March 17, 2025
திண்டுக்கல்: கிராம சபைக் கூட்டம் ; ஆட்சியர் அழைப்பு

திண்டுக்கல்: அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் வருகிற 23.03.2025 அன்று நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
திண்டுக்கல்: இனி வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்!

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News September 13, 2025
திண்டுக்கல்: வாலிபர் போக்சோவில் கைது!

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அஜீத் ( 21) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி மதுரைக்கு அழைத்துச் சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நிலக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் நிலக்கோட்டை போலீசார் அஜீத்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
News September 13, 2025
திண்டுக்கல்லில் செயின் பறிப்பால் பரபரப்பு!

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மனைவி ஜெயந்தி(40). இவர், தனியார் டியூசன் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று(செப்.12) இரவு டியூசன் முடித்து இ.பி காலனி சாலையில் நடந்து வந்துகொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.