News March 17, 2025

அப்பாவு மாறவே இல்லை: EPS

image

சபாநாயகர் அப்பாவு மீண்டும் பழையபடியே செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இன்று காலை அவையில் பேசிய EPS, எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சு நேரலை செய்யப்படுவதில்லை என்று புகார் தெரிவித்திருந்தார். ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த பின்னரும் கூட சபாநாயகர், இன்றைய தனது பேச்சை நேரலை செய்யவில்லை என்று EPS சாடியுள்ளார்.

Similar News

News March 18, 2025

புதினிடம் வலியுறுத்திய PM மோடி

image

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என ரஷ்ய அதிபர் புதினை, PM மோடி வலியுறுத்தியதாக போலந்து வெளியுறவு அமைச்சர் டோபில் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர, இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் தலையிட்டதற்காக PM மோடியை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News March 18, 2025

மார்ச் 18: வரலாற்றில் இன்று!

image

*1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி, 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். 2 ஆண்டுகளில் விடுதலையானார்.
*1858 – டீசல் எஞ்ஜினை கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல் பிறந்த தினம்.
*இந்திய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம்.
*உலக மறுசுழற்சி தினம்.
*ஆசிரியர் நாள் (சிரியா)
*ஆண்கள் மற்றும் போர் வீரர்கள் நாள் (மங்கோலியா)

News March 18, 2025

வாழ்வாதாரத்திற்காக பல மொழிகள் கற்கலாம்: AP CM

image

வாழ்வாதாரத்திற்காக பல மொழிகளை கற்பது அவசியம் என ஆந்திரா CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், மும்மொழியின் அவசியத்தை வலியுறுத்தியும் ஆந்திரா சட்டப்பேரவையில் பேசிய அவர், மொழி என்பது வெறுப்பதற்காக அல்ல என்றும், ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி எனவும் குறிப்பிட்டார். TNஇல் உள்ள முக்கிய கட்சிகள் மும்மொழி கொள்கையை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!