News March 17, 2025
இபிஎஸ்-க்கு ஆதரவாக களமிறங்கிய ஓபிஎஸ்

சட்டப்பேரவையில் காரசாரமாக விவாதம் நடந்து வரும் நிலையில், EPSக்கு ஆதரவாக OPS குரல் கொடுத்தார். கடன் வாங்காமல் இருக்க அமைத்த குழு என்ன செய்கிறது என இபிஎஸ் கேள்வி எழுப்பினார். அவரின் பேச்சை இடைமறித்து, அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் சொல்ல முயற்சித்தார். இதை பார்த்த உடன், சட்டென்று எழுந்த OPS, கடன்களை மூலதனங்களுக்கே செலவிட வேண்டும் என EPSக்கு ஆதரவாக பேசினார். இதை அங்கிருந்த அனைவரும் உற்று நோக்கினர்.
Similar News
News March 18, 2025
ரெண்டாவது மனைவி, மூனாவது மனைவி பிரச்னை

இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா, கொச்சி போலீசில் தனது முன்னாள் மனைவிகள் மீது புகார் அளித்துள்ளார். தனது இரண்டாவது மனைவியான அம்ருதாவும், மூன்றாவது மனைவியான எலிசபெத்தும் சேர்ந்து சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரை அளிக்க, அவர் தனது நான்காவது மனைவி கோகிலாவுடன் வந்திருந்தார்.
News March 18, 2025
KYC அப்டேட்.. வங்கிகளுக்கு பறந்த உத்தரவு

வங்கிகளில் வாடிக்கையாளர்களின் அடிப்படை விவரங்களைப் பதிவுசெய்யும் கேஒய்சி (KYC) நடைமுறையால், வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்படுவதும், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில், தொடர் புகார் எதிரொலியாக KYC படிவங்களை கேட்டு வாடிக்கையாளர்களை வங்கிகள் தொந்தரவு செய்யக்கூடாது என்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா அறிவுறுத்தியுள்ளார்.
News March 18, 2025
தமிழ்நாட்டை முந்தும் தெலங்கானா

தெலங்கானாவில் BC பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 42%ஆக உயர்த்தி மசோதா நிறைவேற்றியிருக்கிறது அம்மாநில அரசு. இந்தியாவில் தமிழ்நாடு(69%) தவிர, எந்த மாநிலத்திலும் 50%க்கு மேல் இட ஒதுக்கீடு கிடையாது. அதனை முறியடிக்கும் வகையில், மொத்த இட ஒதுக்கீட்டை 70 சதவீதமாக உயர்த்தியிருக்கிறார் ரேவந்த் ரெட்டி. அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை சுட்டிக்காட்டி அவர் இதனை செய்திருக்கிறார்.