News March 17, 2025
மீண்டும் இருக்கையில் அமர்ந்தார் அப்பாவு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில், அப்பாவு மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்தார். தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர், அப்பாவு அவையை விட்டு வெளியேறினார். தற்போது, மீண்டும் இருக்கையில் அமர்ந்திருக்கும் அவர், “தவறு செய்திருந்தால் நானே திருத்தியிருப்பேன். அல்லது முதல்வரால் திருத்தப்பட்டிருப்பேன்” என்று பேசினார்.
Similar News
News March 17, 2025
PAK கிரிக்கெட்டுக்கு இரண்டு பக்கமும் அடி

CT தொடரை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ₹869 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. தொடரை நடத்திய பாக்., அணி ஒரு போட்டியை மட்டுமே அங்கு விளையாடியது. ஒரு போட்டி துபாயிலும், ஒரு போட்டி மழையாலும் ரத்தாக, அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் பெரும் வருவாய் இழப்பை சந்தித்த அந்த கிரிக்கெட் வாரியம், வீரர்களுக்கு இனி 5 Star ஹோட்டல் கிடையாது, சம்பளம் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
News March 17, 2025
காயங்களை நாய் நக்கினாலும் ரேபிஸ் தடுப்பூசி அவசியம்

மனிதர்களின் காயங்களை நாய் நக்கினாலும் ஏஆர்வி ரேபிஸ் தடுப்பூசி போட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாய் கடித்து தடுப்பூசி போடாத நபர், ராணிப்பேட்டையில் ஹாஸ்பிடலில் உயிரிழந்தார். இதையடுத்து சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பில், காயங்களில் நாய் நக்கினாலும், நாயின் உமிழ்நீர் மனிதர்கள் மீது பட்டாலும் விஷம்தான். இதற்கும் ஏஆர்வி தடுப்பூசி போட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
News March 17, 2025
சாவை பார்த்து பயமா.. எனக்கா..? மோடி தெறி பதில்

‘பாட் காஸ்ட்’ நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடியிடம், ‘மரணத்தை நினைத்து நீங்கள் என்றாவது பயந்தது உண்டா?’ எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மோடி, நாம் பிறக்கும் போதே மரணம் நிச்சயமாகி விட்டதாகவும், நிச்சயமாக நடக்கப் போகும் ஒரு விஷயத்தை பற்றி எதற்கு பயப்பட வேண்டும்? என்றும் வினவினார். அதனால், மரண பயத்தை புறந்தள்ளி வாழ்க்கையை நேசிக்க வேண்டும் எனக் கூறினார்.