News March 17, 2025

அப்பாவு ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்: EPS

image

சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய EPS, பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். பல நேரங்களில் சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார், தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவதை நேரலையில் வழங்குவதில்லை ஆகிய குற்றச்சாட்டுகளை EPS கூறினார். சபாநாயகர் அவையில் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Similar News

News March 18, 2025

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை

image

மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு ₹1500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால், அவர்களின் பெற்றோர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற்றாலும், அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள், மகளிர் உரிமைத் தொகையும் பெறலாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

News March 18, 2025

இபிஎஸ்ஸூடன் மீண்டும் இணக்கமா?

image

இபிஎஸ்ஸை சந்திப்பதை சில வாரங்களாக தவிர்த்து வந்த செங்கோட்டையன் மீண்டும் இணக்கமாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்துவது போல் சட்டப்பேரவைக்கு வந்த செங்கோட்டையன், அதிமுக MLAக்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டுள்ளார். மேலும், பள்ளிக்கல்வித் துறை விவாதத்தின்போது செங்கோட்டையனை பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் இபிஎஸ் வாய்ப்பு கேட்டார்.

News March 18, 2025

100 நாள் வேலைத் திட்டத்தை முடக்க முயற்சி: சோனியா

image

100 நாள் வேலைத் திட்டத்தை முடக்க BJP அரசு முயற்சி செய்து வருவதாக காங்., மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், ஒரு நாள் ஊதியத்தை ₹400ஆக உயர்த்த வேண்டும் எனவும், வேலை நாட்களை 100லிருந்து, 150ஆக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், இத்திட்டத்திற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!