News March 17, 2025

தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் கூடியது

image

விடுமுறைக்குப் பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடியது. அப்போது, மறைந்த மருத்துவர் செரியன், முன்னாள் உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம், கோவிந்தராஜலு, குணசீலன் ஆகியோரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. மேலும், சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதும் இன்று விவாதம் நடத்தப்படவுள்ளது.

Similar News

News March 18, 2025

சமாதானம் அடைந்த செங்கோட்டையன்?

image

மூத்த தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், செங்கோட்டையன் சமாதானம் அடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. EPS மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்தார். இந்நிலையில், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் செங்கோட்டையனிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், சுமுகத் தீர்வு எட்டப்பட்டதாகவும், இனி கருத்துவேறுபாடு இருக்காது எனவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

News March 18, 2025

ரெண்டாவது மனைவி, மூனாவது மனைவி பிரச்னை

image

இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா, கொச்சி போலீசில் தனது முன்னாள் மனைவிகள் மீது புகார் அளித்துள்ளார். தனது இரண்டாவது மனைவியான அம்ருதாவும், மூன்றாவது மனைவியான எலிசபெத்தும் சேர்ந்து சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரை அளிக்க, அவர் தனது நான்காவது மனைவி கோகிலாவுடன் வந்திருந்தார்.

News March 18, 2025

KYC அப்டேட்.. வங்கிகளுக்கு பறந்த உத்தரவு

image

வங்கிகளில் வாடிக்கையாளர்களின் அடிப்படை விவரங்களைப் பதிவுசெய்யும் கேஒய்சி (KYC) நடைமுறையால், வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்படுவதும், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில், தொடர் புகார் எதிரொலியாக KYC படிவங்களை கேட்டு வாடிக்கையாளர்களை வங்கிகள் தொந்தரவு செய்யக்கூடாது என்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!