News March 17, 2025
நாமக்கல்லில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

நாமக்கல் மாவட்ட தலைமை செய்தியாளர்கள் சங்கம், நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் பெண்கள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கியது. பல்வேறு நிலைகளில் இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் தொழில் அதிபர் ஸ்ரீதேவிமோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுத்தொகை, பதக்கங்கள் வழங்கப்பட்டன.
Similar News
News August 14, 2025
நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவிலில் பொது விருந்து

நாமக்கல் விளையாட்டு மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த உள்ளார். இதன் தொடர்ச்சியாக அருள்மிகு நரசிம்ம சுவாமி கோவிலில் மதியம் 12.30 மணி அளவில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
News August 14, 2025
ஆயுள் பலம் தரும் நித்ய சுமங்கலி மாரியம்மன்!

நாமக்கல்: ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள். திருமண தடை, தம்பதிக்கு இடையே பிரச்னைகள் நீங்க, வாழ்க்கை துணைவருக்கு ஆயுள் பலம் நீடிக்க, குடும்பத்துடன் ஒருமுறை நித்ய சுமங்கலி மாரியம்மனை தரிசித்து வழிபட்டால், நீங்கள் கேட்ட வரம் கிடைக்கும், விரும்பியது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. SHARE IT!
News August 14, 2025
நாமக்கல்: விவசாயிக்கு ரூ.2.5 லட்சம் பரிசு!

வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு பரிசுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மாநில அளவில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் கரும்புப் பயிர்களில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2,50,000, இரண்டாம் பரிசாக ரூ.1,50,000, மூன்றாம் பரிசாக ரூ.1,00,000 வழங்கப்படும் என ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.