News April 1, 2024
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 3ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 28, 2025
நகை கடன்.. முக்கிய அறிவிப்பு

<<18646177>>நகை கடன்<<>> பெறுபவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வங்கிகளுக்கு புதிய அறிவுறுத்தல்களை RBI வழங்கியுள்ளது. இனி நகையை அடகு வைத்து கடன் பெறுவோருக்கு குறைவான தொகையே கிடைக்கும். அதாவது, முன்பு ₹1 லட்சம் மதிப்புள்ள நகைகளுக்கு ₹72,000 வரை கடன் பெறலாம். தற்போது, அந்த மதிப்பு ₹60,000 – ₹65,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தங்கம் விலையில் ஏற்படும் நிலையில்லா மாற்றமே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. SHARE IT.
News December 28, 2025
சொகுசு கப்பலில் தவிக்கும் 123 பேர்!

பப்புவா நியூ கினியில் உள்ள பாறையில் மோதி தரைதட்டிய ஆஸி. சொகுசு கப்பல் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கெயின்ஸிலிருந்து டிச.18 அன்று புறப்பட்ட அந்த கப்பலில் 80 பயணிகள், 43 ஊழியர்கள் உட்பட 123 பேர் உள்ளனர். வரும் டிச.30 உடன் பயணம் முடிவடைய இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதே கப்பலில் கடந்த அக்டோபரில் பயணித்த 80 வயது மூதாட்டி மரணமடைந்தது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
News December 28, 2025
40 வயதில் 40 கோல்கள்: ரொனால்டோ சாதனை!

கால்பந்து வரலாற்றிலேயே அதிகமுறை, ஒரு ஆண்டில் 40-க்கும் மேற்பட்ட கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 2010 முதல் 2025 வரை, 2019-ம் ஆண்டை தவிர மொத்தம் 14 முறை, அவர் 40-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். 40 வயதானாலும், களத்தில் தனது வேகத்தாலும், கோல்களாலும் இன்னும் கால்பந்து உலகை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். 13 முறையுடன் மெஸ்ஸி 2-வது இடத்தில் உள்ளார்.


