News March 17, 2025
நாளை பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 9 மாதங்களாக தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் நாளை பூமிக்கு திரும்புவார் என நாசா உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்பேஸ்X விண்கலம் மூலம் ISSல் இருந்து சுனிதா வில்லியம்ஸூம், புட்ச் வில்மோரும் உள்ளூர் நேரப்படி நாளை மாலை 5.57 மணிக்கு பூமிக்கு திரும்புவார்கள். அதன் பின் கேப்சூல் மூலம் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்கரையில் தரையிறக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 18, 2025
ரஷ்யா, பிரான்ஸை ஓரங்கட்டிய இந்தியா!

2024ல் அதிக அதிகாரமிக்க நாடுகளின் டாப் 10 பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளது. அதுவும் ரஷ்யா, பிரான்ஸ், UKவை ஓரங்கட்டி 0.30 புள்ளிகள் பெற்று முன்னேறி இருக்கிறது. எப்போதும் போல, 0.89 புள்ளிகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 0.80 புள்ளிகளுடன் சீனா 2வது இடத்திலும் நீடிக்கின்றன. பொருளாதாரம், ராணுவம், முதலீட்டு மூலதனத்தை கொண்டு நாடுகளின் பலம் கணக்கிடப்பட்டுள்ளது.
News March 18, 2025
வங்கிகளில் ₹16.35 லட்சம் கோடி வாராக்கடன் விலக்கு

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வங்கிகள் ₹16.35 லட்சம் கோடி வாராக்கடன்களை, தங்கள் வங்கியின் நிதிநிலை அறிக்கையில் இருந்து விலக்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இக்கடன்கள் தள்ளுபடியல்ல என்றும், அவற்றைத் திரும்ப வசூலிக்க வங்கிகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். இந்த வாராக்கடனில் பெருநிறுவனங்களின் பங்கு மட்டும் ₹9.27 லட்சம் கோடி ஆகும்.
News March 18, 2025
சமாதானம் அடைந்த செங்கோட்டையன்?

மூத்த தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், செங்கோட்டையன் சமாதானம் அடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. EPS மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்தார். இந்நிலையில், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் செங்கோட்டையனிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், சுமுகத் தீர்வு எட்டப்பட்டதாகவும், இனி கருத்துவேறுபாடு இருக்காது எனவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.