News March 17, 2025
கிறிஸ் கெயில் பெயரில் ₹2.8 கோடி மோசடி!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் பெயரை பயன்படுத்தி தன்னிடம் ₹2.8 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாக 60 வயது மூதாட்டி புகார் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரான அவர், காபி பவுடர் கம்பெனிக்கு கிறிஸ் கெயில் தான் புரமோட்டராக இருந்து முதலீடுகளை ஈர்ப்பதாக கூறி மோசடி செய்ததாக கூறியுள்ளார். இதில் தனது சகோதரர் உள்பட 6 பேர் உடந்தையாக இருந்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
Similar News
News March 20, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 20, 2025
2008 முதல் ஐபிஎல் விளையாடும் வீரர்கள் பட்டியல் இதோ!

ஐபிஎல் தொடரில் இதுவரை ஆயிரக்கணக்கான கிரிக்கெட் வீரர்கள் விளையாடியுள்ளனர். ஆனால் தொடக்க சீசனில் இருந்து வரவிருக்கும் சீசனில் ஒரு சிலர் மட்டுமே விளையாட உள்ளனர். அவர்களில், ஸ்வப்னில் சிங், ரஹானே, மனிஷ் பாண்டே, இஷாந்த் சர்மா, ஜடேஜா, அஸ்வின், தோனி, கோலி, ரோஹித் ஆகியோர் இன்னும் விளையாடி வருகின்றனர். இவர்கள் அனைவருமே இந்தியர்கள் என்பது கூடுதல் சிறப்பாகும்.
News March 20, 2025
இந்தியா வரும் சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் விரைவில் இந்தியா வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பிய நிலையில், இதை அவரது மூதாதையர் கிராமமான ஜூலாசனில் உறவினர்கள் கொண்டாடினர். சுனிதாவின் சகோதரியான ஃபால்குனி பாண்ட்யா, இந்தியாவுக்கு அவரின் வருகையை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.