News March 17, 2025
சுருளி அருவிக்கு நீர்வரத்து குறைவு!

தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி உள்ளது. இந்த மலையில் உள்ள மேகமலை, மகாராஜா மெட்டு, ஹைவேவிஸ், தூவானம் போன்ற அடர்ந்த வனப் பகுதிகளில் பெய்யும் மழைநீரே சுருளி மலையில் அருவியாகக் கொட்டுகிறது. இந்நிலையில், சில ஆண்டாகப் பருவநிலை மாற்றத்தால், அருவிக்கு வரும் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்தது. இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பின.
Similar News
News November 13, 2025
தேனி: பைக் மீது டிராக்டர் மோதி இருவர் உயிரிழப்பு

தேனியை சேர்ந்தவர் சிவா (25). இவர் அவரது பைக்கில் அவரது நண்பரான அருண் (32) என்பவரை அழைத்து வைத்துக் கொண்டு நேற்று (நவ.12) திண்டுக்கல் குமுளி பைபாஸ் சாலையில் சென்றுள்ளார். கோட்டூர் அருகே பைக் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் டிராக்டர் இவர்களது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர். விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு.
News November 13, 2025
தேனி: 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியை சேர்ந்த பிளஸ்.2 பள்ளி மாணவி மகேஸ்வரி (17). இவர் நேற்று முன்தினம் பள்ளியில் வகுப்பு முடித்து தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள தனது அறைக்கு சென்ற மாணவி யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆண்டிபட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 13, 2025
தேனி: டிகிரி முடித்தால் பரோடா வங்கியில் வேலை

தேனி மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் தமிழகத்தில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 1க்குள் இங்கு <


