News March 17, 2025

தஞ்சை: மனைவியை 30 இடங்களில் வெட்டிய கணவன்

image

கும்பகோணம், சன்னங்குளத்தைச் சேர்ந்த குமார் (40) அவரது மனைவி அனிதா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அனிதா தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். குமார் பலமுறை அழைத்தும், அனிதா வீட்டிற்கு வர மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த குமார் நேற்று அனிதாவை கை, கால், தலை என 30 இடங்களில் வெட்டியுள்ளார். காயமடைந்த அனிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, குமாரை கைது செய்தனர்.

Similar News

News March 19, 2025

சிவனின் தோஷத்தை நீக்கிய ஸ்தலம் தெரியுமா?

image

பிரம்மனுக்கு ஏற்பட்ட கர்வத்தினால் சிவபெருமான் அவர் தலையை கொய்தார். அதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நீக்கிய ஸ்தலம் தான் திருவையாறு அருகே உள்ள கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் கோயில். இத்தலத்தில் சிவனின் தோஷத்தை நீக்கியதால் இங்குள்ள பெருமாளுக்கு ஹரசாப விமோசன பெருமாள் என அழைக்கப்படுகிறார். இது சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. அறிய SHARE செய்யவும்

News March 19, 2025

பிளஸ் டூ மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தேர்வு

image

ஸ்கில் இந்தியன் மற்றும் தமிழ்நாடு கல்வி உதவி மையம்(Tnedusupport) இணைந்து நடத்தும் +2 மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தேர்வு ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ₹25,000, இரண்டாம் பரிசு ₹15,000, மூன்றாம் பரிசு ₹10,000 மேலும் 1000 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.

News March 19, 2025

இந்திய கடற்படையில் வேலை, ரூ.81,100 வரை ஊதியம்

image

இந்திய கடற்படையில் 327 குரூப் C பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் லஸ்கர்களின் சிராங் – 57, லஸ்கார்‌- I – 192, தீயணைப்பாளர் – 73, டோப்பஸ்‌ – 5 என நிரப்பபடவுள்ளது. இதற்கான மாத ஊதியம் ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 1. இதுகுறித்து மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!