News March 17, 2025

சட்ட விரோதமாக பணியாற்றிய வங்கதேசத்தவர் கைது

image

குமரி அருகே இடைக்கோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கு வங்காளதேசத்தை சேர்ந்த சித்திக்(32 ) என்ற இளைஞர் போலி ஆவணங்களுடன் சட்ட விரோதமாக பணிபுரிந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் அவரை கைது செய்து, ஆவணங்களை ஆய்வு செய்தனர். அவரிடம் இருந்த ஆவணத்தில் அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்.

Similar News

News March 17, 2025

குமரி: எரித்துக் கொல்லப்பட்டவரின் அடையாளம் தெரிந்தது

image

குமரி அருகே உள்ள லீபுரம் பாட்டுக்குளம் கரையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? என்ற விவரம் தெரியாமல் இருந்து வந்தது இந்த நிலையில் அவர் யார் என்று அடையாளம் தெரிந்து உள்ளது. அவர் சிவகாசி விளாம்பட்டியை சேர்ந்தவர் என்றும் கொத்தனார் என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News March 17, 2025

கன்னியாகுமரி வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

image

தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த மாதம்(ஏப்ரல்) முதல் வாரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். குமரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சுற்றுப்பயண விவரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 17, 2025

குமரி: உணவு, தங்கும் இடத்துடன் பயிற்சி வகுப்பு!

image

ஆதிதிராவிடர், பழங்குடியினர் & பிற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில்(JEE Mains) தேர்ச்சி பெற பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது. உணவு, தங்குமிடம் & பயிற்சிக்கான 11 மாத செலவை CPCL நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். www.tahdco.com தளத்தில் பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம் என ஆட்சியர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. SHARE IT.

error: Content is protected !!