News March 17, 2025
கள்ளக்குறிச்சி: நகை பாலிஷ் காவல்துறையினர் எச்சரிக்கை

சங்கராபுரம் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள், கிராமங்களில் தங்க நகையை பாலிஷ் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பாலிஷ் போடும் போது, அசல் நகையை எடுத்துக்கொண்டு, ‘கவரிங்’நகையை கொடுத்து மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News March 17, 2025
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி பகுதியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. இதனை இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 17, 2025
பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்திய ஆட்சியர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அலகில் இளநிலை உதவியாளராக ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
News March 17, 2025
அங்கன்வாடியில் ரூ.24,200 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர். அதிகபட்சம் 12ஆம் வகுப்பும், குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 25-35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்துகொள்ள <