News March 17, 2025
லாரி மீது பைக் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

விழுப்புரம், அற்பிசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம் (62). இவர் நேற்று முன்தினம் பூவரசன்குப்பத்திலிருந்து அற்பிசம்பாளையத்திற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த லாரி மீது பைக் மோதியதில் பலத்த காயமடைந்த விநாயகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 23, 2025
விழுப்புரம்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

விழுப்புரத்தில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
News September 23, 2025
விழுப்புரம்: சட்ட சிக்கல் தீர இங்கு போங்க!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் கிருபாபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது, இந்த கோயில் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக கருதப்படுகிறது. மேலும் இந்தக் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு தரிசிப்பதின் வழியே சட்டரீதியான சிக்கல்கள், குடும்பப் பிரச்சினைகள் அல்லது எந்தவொரு வழக்குகளிலும் வெற்றி பெறலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் கடன் தொல்லை நீங்குவதாக ஐதீகம்.ஷேர்.
News September 23, 2025
விழுப்புரம்: தெற்கு ரயில்வேயில் சூப்பர் வேலை.. NO EXAM!

தமிழ்நாடு தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு ஏதும் கிடையாது. இந்த பணிக்கு 15-24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <