News March 17, 2025
தவாகவில் இணைந்த ஜெகதீச பாண்டியன்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள், கூண்டோடு தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்துள்ளனர். சென்னையில் நடந்த இணைப்பு விழாவில், நாதகவின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜெகதீச பாண்டியன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள், வேல்முருகன் முன்னிலையில் தவாகவில் இணைந்துள்ளனர். இதன்பின் அவர்கள் பேசுகையில், அனைவரும் தமிழ் தேசிய பாதையில் பயணிப்போம்; அதேசமயம், பெரியாரையும் போற்றுவோம் என கூறியுள்ளனர்.
Similar News
News September 24, 2025
ஐகோர்ட் எங்கள் கட்டுப்பாட்டில் வராது: சுப்ரீம் கோர்ட்

ஐகோர்ட்கள் தங்களது கட்டுப்பாட்டில் வராது என SC தெரிவித்துள்ளது. தன் மீது 13 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என உ.பி.யை சேர்ந்த ஒருவர் SC-ல் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், பாதி அளவு எண்ணிக்கையில் நீதிபதிகளை வைத்து ஐகோர்ட்கள் செயல்படுவதாகவும், எனவே அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
News September 24, 2025
இந்தியாவை எந்த அணியாலும் வெல்ல முடியும்: BAN கோச்

இந்திய அணியை வெற்றி கொள்ளும் திறன் அனைத்து அணிகளுக்கும் உள்ளதாக வங்கதேச பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். போட்டி அன்று களத்தில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ, அந்த அணியே வெல்லும் எனவும், கடந்த கால நிகழ்வுகள் வெற்றியை தீர்மானிக்காது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வங்கதேசத்தின் பந்துவீச்சு திறன் தற்போது வலுவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 24, 2025
இதுதான் சமூகநீதியா? EPS

மதுரை, செக்கானூரணியில் உள்ள ஐடிஐ விடுதியில் மாணவர் ராகிங் செய்யப்பட்டதற்கு EPS கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு விடுதியில் ஒரு மாணவனை நிர்வாணப்படுத்தி, செருப்பால் அடித்து தாக்குவதை நியாயப்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பிய அவர், ’சமூகநீதி விடுதிகள்’ என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது; விடுதிகளின் நிர்வாகத்திலும், செயல்பாட்டிலும் சமூகநீதி இருக்க வேண்டும் என TN அரசை சாடியுள்ளார்.