News March 17, 2025
இந்தியா வருகை தந்துள்ள நியூசிலாந்து பிரதமர்

5 நாள் அரசு முறை பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த அவரை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். இந்த 5 நாள் பயணத்தின்போது, ஜனாதிபதி திரெளபதி முர்மு, PM மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது, இருதரப்பு வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைக்கும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News September 24, 2025
அக்.6-ல் ஜே.பி.நட்டா தமிழகம் வருகை

BJP தலைவர் ஜே.பி.நட்டா, அக்.6-ம் தேதி தமிழகம் வருகிறார். 2026 தேர்தல் வியூகம், கட்சியை வலுப்படுத்துவது, NDA கூட்டணியில் கட்சிகளை இணைப்பது தொடர்பாக பாஜக தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், அதிமுக மூத்த தலைவர்கள் சிலரை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், நயினார் நாகேந்திரனின் மக்கள் சந்திப்பு பயணத்தை அவர் தொடங்கிவைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News September 24, 2025
காப்பி அடித்த ARR? கோர்ட் கொடுத்த ஆசுவாசம்

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் வரும் ‘வீரா ராஜ வீர’ பாடலில் காப்புரிமையை மீறியதாக, சமீபத்தில் ARR-க்கு ₹2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் ARR மேல்முறையீடு செய்த நிலையில், அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தனது தந்தையின் ‘சிவ ஸ்துதி’ பாடலை அடிப்படையாக கொண்டே ‘வீரா ராஜ வீர’ பாடல் அமைக்கப்பட்டதாக வசிஃபுதின் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News September 24, 2025
விஜய்யின் உருவ பொம்மையை எரிப்பேன்: வீரலட்சுமி

பரப்புரைக்காக விஜய் திருவள்ளூர் வந்தால், அவரின் உருவ பொம்மையை எரிப்பேன் என தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி எச்சரித்துள்ளார். போதைப் பொருள் பயன்பாடு குறித்த சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு விஜய் விளக்கமளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள அவர், மருத்துவ உதவி கேட்ட ரசிகைக்கு விஜய் உதவி செய்யவில்லை என்றும் விமர்சித்துள்ளார். எனவே விஜய்க்கு கருப்பு கொடி காட்டப்போவதாக வீரலட்சுமி கூறியுள்ளார்.