News March 17, 2025
கணவன் முன்பே மனைவி பலாத்காரம்… கொடுமை!

ஒடிசாவின் பலோசர் மாவட்டத்தில் புதிதாக திருமணமான ஒருவர், தன் மனைவியின் ஆதாரில் உள்ள தவறை சரிசெய்ய பக்கத்து வீட்டுக்காரரை நாடியுள்ளார். உதவுவதாக கூறிய அந்நபர், கணவன், மனைவி இருவரையும் மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று, கணவனுக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளான். போதையில் கணவன் சுயநினைவை இழந்த நிலையில், வீடு திரும்பும் வழியில் அப்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தப்பிவிட்டான். போலீஸ் தேடி வருகின்றனர்.
Similar News
News July 6, 2025
60 நாள்கள்; 9 மணி நேர தூக்கம்.. ₹9.1 லட்சம் வென்ற இளம்பெண்

‘Wakefit’ நடத்திய போட்டியில் புனேவை சேர்ந்த பூஜா மாதவ்(22), 60 நாள்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 9 மணி நேரம் தூங்கி ₹9.1 லட்சம் பரிசு வென்றுள்ளார். 4-வது ஆண்டாக இந்த ‘Sleep Champion of the Year’ போட்டி நடந்தது. நாடு முழுவதும் இருந்து சுமார் 1 லட்சம் பேர் அப்ளை செய்த நிலையில் 15 பேர் மட்டுமே இறுதியாக தேர்வாகியிருந்தனர். இந்தாண்டு பரிசு வென்ற பூஜா UPSC தேர்வுக்கு தயாராகி வருகிறாராம்.
News July 6, 2025
ரெட் ஜெயன்ட் பாணியில் களமிறங்கும் விஜய்?

ஜேசன் சஞ்சய் இயக்கிவரும் படத்தின் BTS காட்சிகளில், லைகா உடன் ‘JSJ’ என்ற தயாரிப்பு நிறுவன பெயரும் இடம்பெற்றிருந்தது. இது ஜேசனின் கம்பெனி என அப்போது தகவல் வெளியானது. இந்நிலையில், நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் மாத இதழில், பதிவு செய்யப்பட்ட புதிய Producers பட்டியலில் சஞ்சய்யின் பெயரும் உள்ளது. இதனால், உதயநிதி பாணியில் மகன் மூலம் தயாரிப்பில் இறங்குகிறாரா விஜய் என்ற கேள்வி எழுந்துள்ளது.
News July 6, 2025
திருச்செந்தூர் கோவிலுக்கு ₹206 கோடி வழங்கிய சிவ் நாடார்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் சீரமைப்புப் பணிகளுக்காக, தொழிலதிபர் சிவ் நாடார் ₹206 கோடி நன்கொடை வழங்கி இருக்கிறார். சிவ் நாடாரின் ‘வாமா சுந்தரி அறக்கட்டளை’ மூலமாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. நாளை (ஜூலை 7, திங்கட்கிழமை) திருச்செந்தூர் முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.