News March 17, 2025

கணவன் முன்பே மனைவி பலாத்காரம்… கொடுமை!

image

ஒடிசாவின் பலோசர் மாவட்டத்தில் புதிதாக திருமணமான ஒருவர், தன் மனைவியின் ஆதாரில் உள்ள தவறை சரிசெய்ய பக்கத்து வீட்டுக்காரரை நாடியுள்ளார். உதவுவதாக கூறிய அந்நபர், கணவன், மனைவி இருவரையும் மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று, கணவனுக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளான். போதையில் கணவன் சுயநினைவை இழந்த நிலையில், வீடு திரும்பும் வழியில் அப்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தப்பிவிட்டான். போலீஸ் தேடி வருகின்றனர்.

Similar News

News March 17, 2025

த்ரில்லர் படம் இயக்குவதே கனவு.. பிரபல நடிகையின் ஆசை

image

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் மஞ்சிமா மோகன். தற்போது OTT-யில் வெளியாகியுள்ள சுழல் வெப் தொடரின் 2ஆம் பாகத்தில் இவர் நடித்துள்ளார். இதனிடையே பேட்டி ஒன்றில் தனக்கு த்ரில்லர் படம் இயக்க ஆசை எனத் தெரிவித்துள்ளார். தன்னால் திரைக்கதை எழுத முடியாவிட்டாலும், எழுத்தாளர் எழுதும் கதையைத் திரையில் கொண்டு வர முடியும் எனக் கூறியுள்ளார்.

News March 17, 2025

சட்டப்பேரவையில் EPS, செங்கோட்டையன் பேச்சு

image

கடந்த சில நாள்களாக EPSஐ சந்திப்பதை தவிர்த்துவந்த செங்கோட்டையன், இன்று சட்டப்பேரவையில் அவருடன் பேசினார். டிவிஷன் வாரியான வாக்கெடுப்பு நடைபெற்றபோது அதன் விதிகள் புரியாமல் அதிமுகவினர் அமளியில் ஈடுபட, அதனை செங்கோட்டையன் EPSக்கு தெளிவாக புரிய வைத்தார். பின்னர், பேரவைக்கு வெளியே பேட்டி கொடுத்த EPS, தனக்கும் செங்கோட்டையனுக்கும் எந்தவித மோதலும் இல்லை என்று கூறினார்.

News March 17, 2025

அதிக நேரம் ரம்ஜான் நோன்பு இருப்பவர்கள் யார் தெரியுமா?

image

ரம்ஜான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். சூரிய உதயம், மறைவை பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் நோன்பு நேரம் மாறுபடுகிறது. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து நாட்டு மக்கள் ஒருநாளில் 16 மணி 30 நிமிடங்கள் நோன்பு இருக்கிறார்களாம். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் 13 மணி 45 நிமிடங்கள் நோன்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!