News March 16, 2025

8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: மனிதம் எங்கே?

image

வங்கதேசத்தின் மகுரா நகரில், 8 வயது சிறுமி, தன் அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளாள். அப்போது அங்கிருந்த அக்காள் கணவரின் சகோதரன், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். இதில் பலத்த காயமடைந்த சிறுமியை காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும், 3 முறை ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதால் சிறுமி உயிரிழந்தாள். இதையடுத்து, எந்த குழந்தைக்கும் இந்த கொடுமை நடக்கக் கூடாது என, நீதிகோரி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Similar News

News July 5, 2025

விசிக – காங்., இடையே வெடித்தது சண்டை..!

image

ராமதாஸை சந்தித்த செல்வப்பெருந்தகை, 2011-ம் ஆண்டை போல் விசிகவும் பாமகவும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு விசிகவின் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காங்., வலிமையாகவா இருக்கிறது என வினவிய அவர், விசிகவிற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனால், திமுக கூட்டணிக்குள் சண்டை வெடித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

News July 5, 2025

தனிமையில் வாட வேண்டாமே…

image

போன் நோண்டவே டைம் பத்தாத இன்றைய இளம் ஜெனரேஷன், தனிமையில் தான் வாடுகின்றது. நேரடி பந்தபாசம் கிடைக்காமல் தனிமையில் தவிப்பதால், இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரமும் 100 பேர் இறப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. கொஞ்சம் டைம் ஒதுக்கி நண்பர்களுடன் நேரில் சென்று பேசி சிரித்து மகிழுங்கள். வீட்டிலும் அன்பு பாராட்டுங்கள். ஸ்ட்ரெஸ்லாம் ஓடிப் போய்விடும். இதற்கு முதலில் போனை கொஞ்ச நேரம் தூரம் வையுங்க!

News July 5, 2025

பாமக தலைமை நிர்வாகக் குழு கலைப்பு!

image

பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவைக் கலைத்து புதிய குழுவை ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி, திலகபாமா, கே.பாலு, வெங்கடேஸ்வரன் தலைமையிலிருந்த தலைமைக் குழுவைக் கலைத்துவிட்டு, அன்புமணி, ஜி.கே.மணி, அருள், முரளி சங்கர், கரூர் பாஸ்கர், பரந்தாமன், தீரன், பு.தா.அருள்மொழி உள்ளிட்டோர் அடங்கிய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு யார் தலைவர் என்பதில் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது.

error: Content is protected !!