News March 16, 2025

மகளிர் உரிமைத் தொகை.. பெண்களுக்கு சென்ற SMS

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சேர விரும்பும் பெண்கள், எப்போது அறிவிப்பு வரும் என காத்திருக்கின்றனர். இந்நிலையில், பெண்களின் செல்போன் எண்ணுக்கு தமிழக அரசு தரப்பில் SMS அனுப்பப்பட்டுள்ளது. அதில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ரூ.13,807 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை பலன்பெறாதோருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 17, 2025

ஆஸ்கர் விருது… அசத்தலாக பதிலளித்த கங்கனா..

image

நடிகை கங்கனா நடிப்பில் OTTயில் வெளியான எமர்ஜென்சி திரைப்படம் ஆஸ்கர் வெல்லும் என நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். ஆனால், இதற்கு கங்கனா அளித்த பதில் தான் சரவெடி. வளர்ந்த நாடுகள் மீது அடக்குமுறையை ஏவிய அமெரிக்காவின் உண்மை முகம் இப்படத்தில் தோலுரிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்நாடு ஆஸ்கர் தர விரும்பாது. ஆஸ்கர் அவர்களிடமே இருக்கட்டும்; நமக்கு தேசிய விருது இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

News March 17, 2025

அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து

image

அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கர் மீதான வழக்குகளை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி 2018இல் அரியலூரில் போராட்டம் நடத்தியது தொடர்பாகவும், அதேபோல் 2021இல் பதிவான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்யக் கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், அனுமதியின்றி போராடியது, தேர்தல் வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

News March 17, 2025

இபிஎஸ்-க்கு ஆதரவாக களமிறங்கிய ஓபிஎஸ்

image

சட்டப்பேரவையில் காரசாரமாக விவாதம் நடந்து வரும் நிலையில், EPSக்கு ஆதரவாக OPS குரல் கொடுத்தார். கடன் வாங்காமல் இருக்க அமைத்த குழு என்ன செய்கிறது என இபிஎஸ் கேள்வி எழுப்பினார். அவரின் பேச்சை இடைமறித்து, அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் சொல்ல முயற்சித்தார். இதை பார்த்த உடன், சட்டென்று எழுந்த OPS, கடன்களை மூலதனங்களுக்கே செலவிட வேண்டும் என EPSக்கு ஆதரவாக பேசினார். இதை அங்கிருந்த அனைவரும் உற்று நோக்கினர்.

error: Content is protected !!