News March 16, 2025
2002 குஜராத் கலவரம்… மனம் திறந்தார் மோடி

2002 குஜராத் கலவரம் குறித்து PM மோடி மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். 2002க்கு முன்பு 250க்கும் மேற்பட்ட கலவரங்கள் நடைபெற்று இருப்பதாகவும், ஆனால் 2002 கலவரம் மிகைப்படுத்தி பொய் பிரசாரம் செய்யப்பட்டது, நீதிமன்ற தீர்ப்பால் தன்மீதான களங்கம் நீங்கியது என்றும் கூறியுள்ளார். 2002க்கு பிறகு குஜராத்தில் கலவரம் நடக்கவில்லை, தமது நிர்வாகம் அமைதியை நிலை நிறுத்தியது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 17, 2025
மார்ச் 17: வரலாற்றில் இன்று

*1805 – நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் பேரரசன் ஆனான்.
*1861 – இத்தாலி இராஜ்ஜியம் உருவானது.
*1958 – ஐக்கிய அமெரிக்கா, வங்கார்ட் 1 என்ற செயற்கைக்கோளை ஏவியது.
*1996 – உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
News March 17, 2025
RBIக்கு விருது: PM மோடி பாராட்டு

லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை பாராட்டியுள்ள PM மோடி, நிர்வாகத்தில் புதுமை மற்றும் செயல்திறன் மீதான முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் ஒரு மகத்தான சாதனை எனப் புகழ்ந்துள்ளார். மேலும், டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் இந்தியாவின் நிதி சூழல் அமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி, எண்ணற்ற உயிர்களை மேம்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News March 17, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: தீவினையச்சம்
▶குறள் எண்: 209
▶குறள்: தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
▶பொருள்: தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.