News April 1, 2024
அரியலூர் அருகே தொழிலாளியை தாக்கியவர் கைது

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் தெற்கு தெருவை சேர்ந்த தேவராஜ் மகன் ரவி, சிவக்குமார் மகன் வல்லரசு. இவர்களிடையே முன்விரோத தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற ரவியை, வல்லரசு தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரவி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 15, 2025
அரியலூர்: 28 அரசு காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ் நாடு கூட்டுறவு துறையின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’28’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News August 15, 2025
அரியலூர் மாவட்டத்தின் தனிச்சிறப்பு தெரியுமா?

சுண்ணாம்புக் கல், மணல் கற்கள், பாஸ்பேட் முண்டுகள் மற்றும் சில கனிமங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றன. சுண்ணாம்புப் படிமங்கள், அரியலூர், செந்துறை வட்டங்களில் காணப்படுகின்றன. உடையார்பாளையம் வட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம், பழுப்பு நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் செறிந்த பகுதியாகும். இப்படியாக, கனிம வளங்கள் நிறைந்த மாவட்டமாக அரியலூர் உள்ளது.
News August 14, 2025
அரியலூர்: ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு

அரியலூர் மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டை உடனே பதிவு செய்து பெற முடியும். மேலும் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம்.SHARE NOW