News March 16, 2025

கூடலூரில் லாட்டரி விற்றவர் கைது

image

கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் நேற்று (மார்ச்.15) ரோந்து பணி மேற்கொண்டனர். கூடலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த சிவமூர்த்தி என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 37 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் சிவமூர்த்தியை கைது செய்தனர்.

Similar News

News November 13, 2025

தேனி: பைக் மீது டிராக்டர் மோதி இருவர் உயிரிழப்பு

image

தேனியை சேர்ந்தவர் சிவா (25). இவர் அவரது பைக்கில் அவரது நண்பரான அருண் (32) என்பவரை அழைத்து வைத்துக் கொண்டு நேற்று (நவ.12) திண்டுக்கல் குமுளி பைபாஸ் சாலையில் சென்றுள்ளார். கோட்டூர் அருகே பைக் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் டிராக்டர் இவர்களது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர். விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு.

News November 13, 2025

தேனி: 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியை சேர்ந்த பிளஸ்.2 பள்ளி மாணவி மகேஸ்வரி (17). இவர் நேற்று முன்தினம் பள்ளியில் வகுப்பு முடித்து தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள தனது அறைக்கு சென்ற மாணவி யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆண்டிபட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 13, 2025

தேனி: டிகிரி முடித்தால் பரோடா வங்கியில் வேலை

image

தேனி மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் தமிழகத்தில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 1க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தகுதிகேற்ப சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!