News March 16, 2025
1000 கி.மீ.க்கு அப்பால் தேர்வு மையம் ஏன்? இபிஎஸ்

உதவி லோகோ பைலட் தேர்வுக்கான தேர்வு மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசை இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 1000 கி.மீ.க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது சாதாரண காரியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். வரும் 19ஆம் தேதி உதவி லோகோ பைலட் தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 17, 2025
கல்யாணம் செய்ய மறுத்த காதலியை கொன்ற இளைஞர்!

போலீஸ் அதிகாரியாகும் கனவில் இருந்த இளைஞர் காதல் விவகாரத்தால் தற்போது கம்பி எண்ணி வருகிறார். தி.மலை கலசபாக்கத்தில் தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்த ரோஷினி – சக்திவேலுக்கு காதல் மலர்ந்துள்ளது. ரோஷினி திடீரென சக்திவேலிடம் இருந்து விலகி வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை கல்யாணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சக்திவேல், ரோஷினியை கொலை செய்து உடலை கிணற்றில் வீசியுள்ளார்.
News March 17, 2025
ஆஸ்கர் விருது… அசத்தலாக பதிலளித்த கங்கனா..

நடிகை கங்கனா நடிப்பில் OTTயில் வெளியான எமர்ஜென்சி திரைப்படம் ஆஸ்கர் வெல்லும் என நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். ஆனால், இதற்கு கங்கனா அளித்த பதில் தான் சரவெடி. வளர்ந்த நாடுகள் மீது அடக்குமுறையை ஏவிய அமெரிக்காவின் உண்மை முகம் இப்படத்தில் தோலுரிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்நாடு ஆஸ்கர் தர விரும்பாது. ஆஸ்கர் அவர்களிடமே இருக்கட்டும்; நமக்கு தேசிய விருது இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
News March 17, 2025
அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து

அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கர் மீதான வழக்குகளை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி 2018இல் அரியலூரில் போராட்டம் நடத்தியது தொடர்பாகவும், அதேபோல் 2021இல் பதிவான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்யக் கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், அனுமதியின்றி போராடியது, தேர்தல் வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.