News March 16, 2025
எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்

நெல்லையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் (64) இன்று காலமானார். உடல்நலக்குறைவால் சில நாட்களாக அவதியடைந்து வந்த நிலையில், அவரது உயிர் இன்று பிரிந்துள்ளது. தமிழக அரசின் உ.வே.சா விருது பெற்ற இவரின் கனவில் உதிர்ந்த பூ உள்ளிட்ட சிறுகதைகள், திருநெல்வேலி: நீர்-நிலம்-மனிதர்கள், வேணுவன மனிதர்கள் உள்ளிட்ட நூல்கள் பிரபலமானவை. எழுதுவது மட்டுமல்ல, சமூக களப்பணியிலும் முன்னணியில் இருப்பவர்.
Similar News
News March 17, 2025
பெண்களுக்கு அடையாள அட்டை

மகளிர் சுய உதவிக்குழுவில் இடம்பெற்றுள்ள 54 லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக விவரங்களை சேகரிக்கும் பணியை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அடையாள அட்டை வழங்கிய பின், வங்கிகளில் எளிதாக கடன் பெற முடியும். அதேபோல், அரசின் பல்வேறு நல உதவிகளும், அவ்வப்போது அறிவிக்கப்படும் பலன்களும் சென்றடைய வழி ஏற்படும்.
News March 17, 2025
நானும் COOL மனநிலையை இழந்திருக்கிறேன்: தோனி

கேப்டன் COOL என பெயர் வாங்கிய தோனி, ஒருமுறை அந்த மனநிலையை இழந்துவிட்டதாக மனம் திறந்திருக்கிறார். 2019ல் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது மைதானத்திற்குள் சென்று நோ பாலுக்காக வாதிட்டது, தான் செய்த மிகப் பெரிய தவறு என ஒப்புக் கொண்டுள்ளார். கூலான மனநிலையை எப்போதாவது இழந்ததுண்டா என்ற கேள்விக்கு தோனி இந்த பதிலை அளித்துள்ளார். பெரிய வீரர் என்றாலும், அவரும் மனிதர் தானே!
News March 17, 2025
நலமுடன் பிரார்த்தனை செய்யும் போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸ் பிரார்த்தனை செய்யும் புதிய போட்டோவை வாடிகன் மாளிகை வெளியிட்டுள்ளது. நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த மாதம் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலம்பெற உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை செய்தனர். இதனிடையே, ஜெமில்லி ஹாஸ்பிடலில், சக பாதிரியார்களுடன் திருப்பலியில் ஈடுபட்ட போப், தான் நலமுடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளார்.