News March 16, 2025
வரும் 19ஆம் தேதி ஆட்டோக்கள் ஸ்டிரைக்!

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி வரும் 19ல் ஸ்டிரைக் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்சி டிரைவர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு அனைத்து பகுதி மக்களும் ஆதரவு தர வேண்டும் என அந்த கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. கால் டாக்சி APPகளை கட்டுப்படுத்த அரசே ஒரு ஆட்டோ APPஐ தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 16, 2025
நடிகை சமந்தா ஹாஸ்பிடலில் அட்மிட்

நடிகை சமந்தா மீண்டும் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருப்பது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. மயோசிடிஸ் நோயால் அவதியுற்று வரும் சமந்தா, அவ்வப்போது ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தற்போது ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவது போன்ற போட்டோவை அவரே சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் கவலையுற்ற ரசிகர்கள், அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
News March 16, 2025
துணை சபாநாயகர் பதவி என்னாச்சு? (1/2)

மோடி முதல்முறையாக பிரதமராக பதவியேற்றபோது, 16ஆவது மக்களவை துணை சபாநாயகராக தம்பிதுரை (அதிமுக) பதவி வகித்தார். பின்னர் 17ஆவது மக்களவை சபாநாயகர் தேர்வில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதனால் எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படும் வழக்கத்தை மத்திய அரசு கைவிட்டது. 18ஆவது மக்களவையிலும் இதே பிரச்னை நீடித்ததால், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படவில்லை.
News March 16, 2025
துணை சபாநாயகர் பதவி என்னாச்சு? (2/2)

சபாநாயகர் இல்லாத நேரத்தில் மக்களவையை வழிநடத்த வேண்டியது துணை சபாநாயகர் கடமை. அது அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட பதவி. சபாநாயகருக்கு இருக்கும் அனைத்து அதிகாரங்களும் துணை சபாநாயகருக்கும் உண்டு. ஆனால் கடந்த 2 மக்களவையிலும் அவர் தேர்வு செய்யப்படாதது அரசியலமைப்பு சட்டத்தின் 93ஆவது பிரிவை மீறும் செயலாகும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?