News March 16, 2025
அதிகாலையில் கோர விபத்து.. 3 பேர் உடல் நசுங்கி பலி

விழுப்புரத்தில் பைக் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. செஞ்சியை அடுத்த வல்லம் தொண்டி ஆறு அருகே, இன்று அதிகாலை பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, துடிதுடித்து உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து உடனே எந்த தகவலும் வெளியாகவில்லை.
Similar News
News July 9, 2025
சிறுவர்களுக்கான பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் PAN கார்டு கட்டாயமாகும். குழந்தைகளின் பெயரில் முதலீடுகள் உள்ளிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு இது பயன்படுகிறது. இதற்கு NSDL வெப்சைட்டில் அப்ளை செய்யும்போது Form 49A-ஐத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க வேண்டும். உங்களுக்கு பான் கார்டு வரும்போது புகைப்படம், கையெழுத்து இல்லாமலே வரும். எனவே, 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் மீண்டும் விண்ணப்பித்து போட்டோ உடன் கார்டைப் பெறலாம்.
News July 9, 2025
ஓரணியில் திமுகவினரே இல்லை.. உள்கட்சி பூசல்

நேற்று நடைபெற்ற புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி, KN நேரு & ரகுபதி ஆகியோரின் போட்டோஸ் இருக்கும்போது அதே பகுதியைச் சேர்ந்த மெய்யநாதன் போட்டோ எங்கே என அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று கூறிவிட்டு, ‘ஓரணியில் திமுகவினரே இல்லை’ என ஒருவர் பேசியதால் பரபரப்பானது. முன்னதாக, நிர்வாகியை நேரு தாக்க பாய்ந்ததும் பேசுபொருளானது.
News July 9, 2025
பாலபாரதி உள்ளிட்ட 300 பேர் அதிரடி கைது!

தேனி ரயில் நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் Ex MLA பாலபாரதி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசுக்கு எதிராக 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் CITU, LPF உள்ளிட்டோர் ஊர்வலம் நடத்தி வருகின்றனர். உங்கள் ஊர் நிலவரம் என்ன?