News March 16, 2025
நாளை நல்ல நாள்.. பத்திரப்பதிவு செய்யுங்க

பங்குனி மாதத்தின் மங்களகரமான தினமான மார்ச் 17ம் தேதி அதிகளவில் பத்திர பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நாளை ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 300 டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் அலுவலகங்களுக்கு 150 சாதாரண டோக்கன்களும் வழங்கப்படுகிறது.
Similar News
News July 5, 2025
எடுத்த காரியத்தில் வெற்றி பெற…

எந்த விஷயத்திலும் வெற்றி பெற, அனுமனின் அனுக்கிரகம் வேண்டும். சனிக்கிழமை மட்டுமின்றி, தினமும் 21 முறை இந்த அனுமன் ஸ்லோகத்தை சொல்லி வாருங்கள்.
ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ
ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே.
அர்த்தம்: ‘ராமனின் தூதனாகிய, மிகுந்த வீரமுள்ள, ருத்ரனின் சக்தியுடன் பிறந்த, ஆஞ்சநேயரே, வாயு புத்திரனே, உமக்கு வணக்கம்.
News July 5, 2025
வேலைவாய்ப்பு இலக்கை முந்தி TNPSC சாதனை..

ஜனவரி 2026-க்குள் 17,595 காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், ஜூன் 2024 முதல் ஜூன் 2025 வரை 17,702 இளைஞர்களை தேர்வு செய்துள்ளது. இதன்மூலம், 7 மாதங்களுக்கு முன்பாகவே நிர்ணயித்த இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது TNPSC. மேலும் கூடுதலாக 2500+ இடங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அது 2026 ஜனவரிக்குள் நிரப்பப்படும் எனவும் TNPSC அறிவித்துள்ளது.
News July 5, 2025
சீனாவை சீண்டிய கிரண் ரிஜிஜு.. என்ன ஆச்சு?

தலாய் லாமாவின் வாரிசு நியமனம் அவரது விருப்பப்படி அமைய வேண்டும் என்ற மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் கருத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திபெத் விவகாரங்களில் இந்தியா எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், இருதரப்பு உறவுகளைப் பாதிக்காதவாறு தனது நிலைப்பாட்டை மதிக்க வேண்டும் எனவும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஓ நிங் வலியுறுத்தியுள்ளார்.