News March 16, 2025
நாளை நல்ல நாள்.. பத்திரப்பதிவு செய்யுங்க

பங்குனி மாதத்தின் மங்களகரமான தினமான மார்ச் 17ம் தேதி அதிகளவில் பத்திர பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நாளை ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 300 டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் அலுவலகங்களுக்கு 150 சாதாரண டோக்கன்களும் வழங்கப்படுகிறது.
Similar News
News March 16, 2025
ரூ.75 கோடி போதைப்பொருள்… சிக்கிய வெளிநாட்டு பெண்கள்!

கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவுக்கு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு போலீஸ் தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் 2 நைஜீரியப் பெண்கள். விமான நிலையத்தில் அவர்களிடம் நடத்திய சோதனையில், ரூ.75 கோடி மதிப்புள்ள 37 கிலோ MDMA போதைப்பொருள் சிக்கியுள்ளது. டெல்லியில் வசித்துவரும் அவர்கள், கடந்த ஒரு வருடத்தில் பெங்களூருவுக்கு 22 முறை, மும்பைக்கு 37 முறை பயணம் செய்துள்ளனர்.
News March 16, 2025
நடிகை சமந்தா ஹாஸ்பிடலில் அட்மிட்

நடிகை சமந்தா மீண்டும் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருப்பது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. மயோசிடிஸ் நோயால் அவதியுற்று வரும் சமந்தா, அவ்வப்போது ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தற்போது ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவது போன்ற போட்டோவை அவரே சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் கவலையுற்ற ரசிகர்கள், அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
News March 16, 2025
துணை சபாநாயகர் பதவி என்னாச்சு? (1/2)

மோடி முதல்முறையாக பிரதமராக பதவியேற்றபோது, 16ஆவது மக்களவை துணை சபாநாயகராக தம்பிதுரை (அதிமுக) பதவி வகித்தார். பின்னர் 17ஆவது மக்களவை சபாநாயகர் தேர்வில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதனால் எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படும் வழக்கத்தை மத்திய அரசு கைவிட்டது. 18ஆவது மக்களவையிலும் இதே பிரச்னை நீடித்ததால், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படவில்லை.