News March 16, 2025

களத்தில் இறங்கிய சுனில் சேத்ரி!

image

இந்திய கால்பந்து அணிக்காக மீண்டும் சர்வதேச போட்டிகளில் களமிறங்கியுள்ள சுனில் சேத்ரி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மாலத்தீவு மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டிகளில் அவர் விளையாடவுள்ளார். அதிக கோல்கள் அடித்த வீரர்களில் 4 வது இடத்தில் உள்ள சுனில் சேத்ரி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. நட்சத்திர வீரர் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்.

Similar News

News March 16, 2025

‘பைத்தியக்காரத்தனம்’… தோனி பற்றி பேசிய கோலி!

image

தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது, துணை கேப்டனாக செயல்பட்டது குறித்து விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். ஃபீல்டிங் செட்டப் உள்ளிட்ட ஆட்ட வியூகங்களை பகிர்ந்தால், எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, இது என்ன பைத்தியக்காரத்தனம் போல் உள்ளது என தோனி ரியாக்‌ஷன் கொடுப்பார் என்று அவர் ஜாலியாக கூறியுள்ளார். தோனியிடம் நிறைய கற்றுக் கொண்டதாகவும் கோலி தெரிவித்தார்.

News March 16, 2025

மனிதரை கல்லாக்கும் கோயில்?

image

ராஜஸ்தானின் குல்தாரா கிராமத்தில் உள்ள கிரடு கோயிலுக்கு இரவில் யாரும் வருவதோ, தங்குவதோ இல்லை. இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அதாவது, பழங்காலத்தில் முனிவர் ஒருவர் சீடர்களுடன் வந்ததாகவும், சீடர்கள் உடல்நிலை பாதித்தபோது உதவாத கிராமத்தினரை இரவில் கல்லாகிவிடுவர் என சாபமிட்டதாகவும், ஒரு பெண் கல்லானதாகவும் கூறப்படுகிறது. இந்த அச்சமே இரவில் யாரும் அங்கு வராததற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

News March 16, 2025

ஐடி கார்டு இல்லாமல் ஆட்டோ ஓட்ட முடியாது

image

ஆட்டோ ஓட்டுநர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் வகையில், அடையாள அட்டை வழங்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம்பெண் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, PHOTO உடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

error: Content is protected !!